ராயல் கேர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் இருந்து சிகிச்சை பெற்று குணமடைந்தவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட குணமடைந்தவர்கள் கலந்து கொண்டனர்.
இதில் ராயல்கேர் மருத்துவமனையின் தலைவர் டாக்டர் க.மாதேஸ்வரன் பேசுகையில்,“எங்களை நாடி வரும் மக்களுக்கு நவீன மற்றும் தரமான சேவைகளும் மீண்டு எழும் சிகிச்சைகளும் அளிக்கிறோம்“ என்றார்.
தொடர்ந்து, விழாவில் சிறப்பு விருந்தினராக கங்கா மருத்துவமனை டாக்டர் ஷி.ராஜசபாபதி மற்றும் கௌரவ விருந்தினராக ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் தலைவர் வி.கிருஷ்ணன் கலந்துகொண்டு உரையாற்றினர்.
முன்னதாக தீவிர சிகிச்சை பிரிவு மருத்துவர் விவேகானந்தன் அனைவரையும் வரவேற்றார். ராயல் கேர் மருத்துவமனை டாக்டர் ரி .மாதேஸ்வரன் முன்னிலையில் நடைபெற்ற நிகழ்வில் கடினமான சூழ்நிலையில் இருந்து மீண்டு வந்தவர்கள் தங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர்.