fbpx
Homeபிற செய்திகள்கோவை பூம்புகாரில் கண்கவர் கொலு பொம்மைகள் கண்காட்சி

கோவை பூம்புகாரில் கண்கவர் கொலு பொம்மைகள் கண்காட்சி

கண்ணைக் கவரும் கொலு பொம்மைகள்- நவராத்திரியை முன்னிட்டு கோவை பூம்புகார் விற்பனை நிலையத்தில் கொலு பொம்மைகள் கண்காட்சி மற்றும் விற் பனை துவங்கப்பட்டுள்ளது.

இம்முறை புதுவரவாக சந்திராயன் செட் உட் பட ஏராளமானவை வந்துள் ளன. இந்து மத மக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றாக நவராத்திரி விழா, ஒன்பது நாட்கள் கோலாகலமாக கொண் டாடப்படும்.

இவ்விழாவில் முக்கிய அம்சமாக இல்லம் மற்றும் கோவில்களில் கொலு பொம்மைகளை வைத்து வழிபடுவர். அதன்படி இந்த ஆண் டின் நவராத்திரி விழா அக்டோபர் 15ம் தேதி துவங்கி 24ஆம் தேதி வரை கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு கொலு பொம்மைகள் விற்பனை பல்வேறு இடங்களில் துவங்கி உள்ளது.

இந்நிலையில் கோவை டவுன்ஹால் பகுதியில் உள்ள பூம்புகார் விற் பனையகத்தில் கொலு பொம்மைகள் கண்காட்சி மற்றும் விற்பனை துவங்கியது. இதுகுறித்து கோவை பூம்புகார் விற்பனை நிலையமேலாளர் ரொனால்டு செல்வஸ்டின் நிருபர்களிடம் கூறியதாவது:- இக்கண்காட்சி அக் டோபர் மாதம் 25ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

இங்கு பல்வேறு சாமி சிலைகள், பண்டி கைகளையும் இல்ல விழாக்களையும் குறிக்கும் விதமான பொம்மைகள் என பல்வேறு பொம்மைகள் காட்சிப் படுத்தப்பட்டுள்ளன.

குறிப்பாக தசாவதாரம் செட், விநாயகர் செட், அத்திவரதர், தர்பார் செட், அஷ்டலட்சுமி செட், மும்மூர்த்தி செட், கிரிவலம் செட், கருட சேவை, திருப்பதி, குபேரன், வைகுண்டம், மைசூர் தசரா, வாசு தேவர் உள் ளிட்ட செட் மற்றும் இந்தாண்டு புது வரவாக சந்திராயன் விண்கல செட் மற்றும் மருதமலை கோவில் முழுமையான தோற்றத்தை அறிமுக படுத்தி உள்ளோம்

மேலும், மாமல்லபுரம் செட், உழவர் சந்தை செட், ஜல்லிக்கட்டு, தஞ்சாவூர் தலையாட்டி பொம்மைகள், துலா பாரம், அரசியல் தலை வர்கள், மரபாச்சி பொம்மைகள், நடை வண்டி, சமையல் செட், விநாயகர் கிரிக்கெட் டீம் மற்றும் கொலு பரிசுப் பொருட்கள் உள்ளிட்ட ஏராளமான பொருட்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.

இந்த பொம்மைகள் தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, ராஜஸ்தான், புதுச்சேரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து விற்பனைக்காக கொண்டு வரப்பட்டுள் ளன.

இதில் இடம் பெற்றுள்ள சந்திராயன் விலை செட்டின் விலை 2999 ஆகும். மற்ற கொலு பொம்மைகளின் விலை 110 ரூபாயில் இருந்து துவங்குகிறது.
மேலும் இந்நாட்களில் பொருட்களுக்கு ஏற்ப தள்ளுபடியும் வழங்கப் படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

கண்காட்சி துவங்கிய முதல் நாளே ஏராளமான மக்கள் கண்காட்சியை பார்வையிட்டு கொலு பொம்மைகளை வாங்கி செல்கின்றனர்.

படிக்க வேண்டும்

spot_img