fbpx
Homeபிற செய்திகள்சர்வதேச தரத்தில் அழகு கலை நிபுணர் பயிற்சி கோவையில் ‘லாக்மே அகாடமி’ துவக்கம்

சர்வதேச தரத்தில் அழகு கலை நிபுணர் பயிற்சி கோவையில் ‘லாக்மே அகாடமி’ துவக்கம்

கோவையில் சர்வதேச தரத்திலான அழகுக்கலை நிபுணர் பயிற்சியை வழங்கும் வகையில் லாக்மே அகாடமி துவங்கப்பட்டுள்ளது. தென்னிந்தியாவில் முதல்முறையாக அதிநவீன உபகரணங்களுடன் அமைந்துள்ள இப்பயிற்சி மையத்தில், திறப்பு விழா அறிமுகச் சலுகையாக பயிற்சிக் கட்டணத்தில் 50 சத வீதம் தள்ளுபடி வழங்கப்படுகிறது.

உடல்நலன் மற்றும் பராமரிப்பில் அனைவரும் மிகுந்த கவனம் செலுத்தும் தற்போதைய சூழ்நிலையில், அழகுக்கலை நிபுணர்கள் மற்றும் உடல்நலன் பராமரிப் பாளர்களின் தேவைகள் அதிகரித்துள்ளன.

அதிக சம்பளத்துடன் கூடிய வேலைவாய்ப்புகள் மட்டுமின்றி, தொழில்முனைவோராக உருவாகவும் அழகுக்கலை நிபுணர்களுக்கு வாய்ப்புகள் காத்திருக்கின்றன.

அழகுக்கலை நிபுணராக வேண்டுமென விரும்பு வோரின் கனவுகளை நனவாக்கும் லாக்மே அகாடாமி, உலக தரத்திலான அழகுக்கலை பயிற்சியை வழங்குகிறது.

தென்னிந்திய அளவில் எங்கும் இல்லாத அளவுக்கு, அதிநவீன உட்கட்டமைப்பு வசதிகளுடன் கோவை காந்திபுரத்தில் லாக்மே அகாடாமி பயிற்சி மையத்தில் அழகு சாதனங்களைக் கையாளுதல், சிறப்பு சருமப் பராமரிப்பு, முடி அலங்காரம் மற்றும் பராமரிப்பு, ஒப்பனைக் கலை, நகங்கள் சீரமைப்பு மற்றும் அழகுபடுத்தல், உடல்நலன் பராமரிப்பு உள் ளிட்டவற்றில் சர்வதேச தரத்திலான பயிற்சிகள் அளிக் கப்படுகின்றன.

திறப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக பிரபல திரைப்பட நட்சத்திரம் சைத்ரா ரெட்டி பங்கேற்றார். யான் அறக்கட்டளை பிரதீப்குமார், தொழிலதிபர் கே.வி.அரங்கசாமி, லாக்மே அகாடமி நிர்வாகி விஜய சூரியன், லஷ்மி மற்றும் சின்னத்திரை, சமூகவலைதளப் பிரபலங்கள் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img