fbpx
Homeபிற செய்திகள்சிருஷ்டி 2024: கோவையில் கைவினை பொருள் கண்காட்சி விற்பனை தொடக்க விழா

சிருஷ்டி 2024: கோவையில் கைவினை பொருள் கண்காட்சி விற்பனை தொடக்க விழா

கோவை அவிநாசி ரோட்டில் உள்ள சுகுணா திருமண மண்டபத்தில் கிராப்ட் கவுன்சில் ஆப் தமிழ்நாடு நடத்தும் கைவினைப் பொருள் கண்காட்சி விற்பனை தொடக்க விழா இன்று (வியாழக்கிழமை)நடைபெற்றது. வருகிற21ந் தேதி வரை 3 நாட்கள் நடைபெறும் இந்த கண் காட்சி காலை 10.30 மணி முதல் இரவு 8.00 மணி வரை நடக்கிறது. இந்த கண்காட்சியில் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என அனைவருக்குமான ஆயத்த ஆடை கள், வீட்டு அலங்கார பொருட்கள், துணி வகைகள், அரிதான நகைகள் போன்றவை விற்பனைக்காக காட்சிப் படுத்தப்பட்டு உள்ளன.

படிக்க வேண்டும்

spot_img