fbpx
Homeபிற செய்திகள்கோவையில் நாய்கள் கடித்து மான்கள் பலியான பரிதாபம்

கோவையில் நாய்கள் கடித்து மான்கள் பலியான பரிதாபம்

கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் நாய்கள் கடித்ததில் 3 மான்கள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து வனத்துறை கூறிருப்பதாவது:

நேற்று காலை சுமார் 11 மணியளவில் கோவை வனச்சரகம் தடாகம் பிரிவு மருதமலை சுற்றுக்கு உட்பட்ட பாரதியார் பல்கலைக்கழகத்தில் மூன்று மான்களை நாய்கள் துரத்துவதாக தகவல் கிடைத்தது.

இதன் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு சென்று தணிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதில் கூடைப்பந்து விளையாட்டு மைதானத்தில் 3 மான்கள் ஆங்காங்கே இறந்த நிலையில் தென்பட்டது. அருகில் சென்று பார்த்த போது மானின் உடலில் ஆங்காங்கே சிறிய ரத்த காயம் தென்பட்டது.

மேலும் அப்பகுதியில் நாய்களின் கால்தடம் தென்ப்பட்டது. உடனடியாக மாவட்ட வன அலுவலர் மற்றும் வனச்சரக அலுவலருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அவரது அறிவுரையின்படி வடவள்ளி கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு உடற்கூறு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

சம்பவ இடமானது வனப்பகுதியில் இருந்து சுமார் 600 மீட்டர் தொலைவில் உள்ளது.
இவ்வாறு வனத்துறை தெரிவித்துள்ளது.

படிக்க வேண்டும்

spot_img