fbpx
Homeபிற செய்திகள்ராணிப்பேட்டையில் கிராம நிர்வாக அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்

ராணிப்பேட்டையில் கிராம நிர்வாக அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்

தமிழ்நாடு அனைத்து கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பாக டிஜிட்டல் கிராப் சர்வே பணிக்கு தேவையான உபகரணங்கள் வழங்க கோரி கருப்பு பேட்ச் அணிந்து ராணிப்பேட்டை வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு கிராம நிர்வாக அலுவலர் சங்கத்தின் மாவட்ட தலைவர் பா.சிவக்குமார் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர் ப்பாட்டத்தில் டிஜிட்டல் கிராப் சர்வே பணிக்கு தேவையான உபகரணங்களான டேப் மற்றும் மதிப்பூதியம் வழங்க கோரியும், கூடுதல் பணியாளர்களை நியமிக்க கோரியும் கோஷங்கள் எழுப்பப் பட்டது.

இதில் கிராம நிர்வாக அலுவலர்கள் சங்க மாவட்ட செயலாளர் சக்கரவர்த்தி, மாவட்ட பொருளாளர் கீதா, ராணிப்பேட்டை கோட்ட செயலாளர் கார்த்திகேயன் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள் முன்னேற்ற சங்க மாவட்ட பொறு ப்பாளர்கள் கபிலன், சங்கர்நாராயணன் மற்றும் வாலாஜா, ஆற்காடு, கலவை, சோளிங்கர், வட்டங்களின் பொறுப்பாளர்கள் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள் சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img