fbpx
Homeபிற செய்திகள்விழிப்புணர்வு வாகனத்தை துவக்கிவைத்து தருமபுரி மாவட்ட ஆட்சியர் சாந்தி பேச்சு

விழிப்புணர்வு வாகனத்தை துவக்கிவைத்து தருமபுரி மாவட்ட ஆட்சியர் சாந்தி பேச்சு

தருமபுரி மாவட்டம், அவ்வை யார் அரசு மேல்நிலைப்பள்ளியில் மாவட்ட சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் சார்பாக சர்வதேச பெண் குழந்தைகள் தின விழாவை முன்னிட்டு “பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்” என்ற உறுதிமொழியினை ஏற்று, விழிப்புணர்வு வாகனத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் கி.சாந்தி துவக்கி வைத்து, பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற பள்ளி மாணவியர்களுக்கு பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினார்.

பின்னர் மாவட்ட ஆட்சித்தலை வர் கி.சாந்தி தெரிவித்ததாவது:-
தருமபுரி மாவட்டத்தில் “பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்” என்ற திட்டத்தின் கீழ் பள்ளி மாணவியர்களுக்கு குழந்தை திருமணம், போக்சோ சட்டம், இளம் வயது கர்ப்பம் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மாணவிகளிடையே நடத்தப் பட்டது.

மேலும், மாவட்டத்தின் பெண் குழந்தைகளின் பிறப்பு விகிதத்தை உயர்த்துவதே இதன் மிக முக்கிய நோக்கமாகவும் மற்றும் மிகவும் பின்தங்கிய
குடும்பத்தினர், ஏழை மக்களிடையே பெண் கல்வியின் முக்கியத்துவத்தினை தெரிவித்து விழிப்புணர்வு ஏற்படுத்த தெரிவிக்கப்பட்டது. முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம், புது மைப்பெண் திட்டம் மற்றும் குழந்தைத்திருமண தடுப்புச்சட்டம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப் பட்டது.

படித்த பெண்கள் சிறந்த ஆரோக்கியத்தை அனுபவிப்பதற்கும், அதிக வருமானம் ஈட்டுவதற்கும் அவர்களின் சமூகங்கள் மற்றும் பொருளாதாரங்களுக்கு தீவிரமாகப் பங்களிப்பதற்கும் அதிக வாய்ப்பு உள்ளது.
உலகெங்கிலும் உள்ள சிறுமிகளின் சாதனைகள் மற்றும் திறனைக் கொண்டாடப்படுகிறது. பெண்கள் பெரிய கனவு காணவும், நட்சத்திரங்களை அடை யவும், பல்வேறு துறைகளில் தலைவர்களாகவும், நேர்மறையான மாற்றத் திற்கு பங்களிக்கவும் தூண்டப்படு கிறது. பெண் குழந்தைகளை உயர்கல்வி வரை படிக்க வைக்க வேண்டும். அப்போது தான் அவர்கள் பொருளாதார அளவில் சுயமாக நிற்க உதவும்.
சமத்துவம் மற்றும் வளமான எதிர்காலத்தை அவர்களுக்கு கிடைக்க வழி செய்யும்.

பெண் கல்வியை ஊக்குவிக்க வும், குழந்தை திருமணத்தை தடுக்கவும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் மாதாந்தோறும் ரூ.1000 வழங்கப் பட்டு வருகிறது.
மேலும் முதல மைச்சரின் இரு பெண் குழந்தைகள் திட்டத்தின் கீழ் நிதியுதவிகள் என பல்வேறு நலத்திட்டங்கள் வழங்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட சமூக நல அலுவலர் ச.பவித்ரா, மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இணை இயக்குநர் மரு.ம.சாந்தி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஐ.ஜோதிசந்திரா, மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் செண்பகவள்ளி, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் நா.நடராஜன், வட் டாட்சியர் க.சண்முகசுந்தரம், உள்ளிட்ட
தொடர்புடைய அலுவலர்கள், பள்ளி தலைமை ஆசிரியர் கலைச்செல்வி, ஆசிரியர் மற்றும் மாணவியர்கள் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img