fbpx
Homeபிற செய்திகள்தர்மபுரி மாவட்ட செங்குந்த மகாஜன சங்கம் சார்பில் தொழிற்கல்வி மாணவர்களுக்கு ஊக்கத்தொகை

தர்மபுரி மாவட்ட செங்குந்த மகாஜன சங்கம் சார்பில் தொழிற்கல்வி மாணவர்களுக்கு ஊக்கத்தொகை

தர்மபுரி மாவட்ட செங்குந்த மகாஜன சங்கம் சார்பில் அரசு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு ஊக்கப் பரிசு மற்றும் தொழிற்கல்வி படிக்கும் ஏழை மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் விழா தர்மபுரி நெசவாளர் நகர் செங்குந்தர் திருமண மஹாலில் நடைபெற்றது.

இவ்விழாவுக்கு சங்க மாவட்ட தலைவர் சந் தோஷ்குமார் தலைமை தாங்கினார். மாவட்ட பொதுச்செயலாளர் சச்சி தானந்தம் வரவேற்று பேசினார்.
மாவட்ட துணை தலைவர் அன்பு சதாசிவம் உறுதிமொழி வாசித்தார்.

முன்னாள் பேரூராட்சி தலைவர் மாசிலாமணி, பாப்பாரப்பட்டி தொழி லதிபர் சண்முகம் ஆகி யோர் முன்னிலை வகித்தனர்.

இவ்விழாவில் செங்குந்தர் மகாஜன சங்க மாநில தலைவர் செல்வராஜ் கலந்துகொண்டு மாணவர்களுக்கு பதக்கங்கள், ஊக்கப் பரிசு மற்றும் உதவி தொகைகளை வழங்கி பேசினார்.

மேலும் பல்வேறு துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு நினைவு பரிசு வழங்கி கௌரவிக்கப்பட்டது.

படிக்க வேண்டும்

spot_img