fbpx
Homeபிற செய்திகள்திருவண்ணாமலையில் அரசு அலுவலர்களுக்கான தீபாவளி சிறப்பு தொகுப்பு விற்பனை துவக்கம்

திருவண்ணாமலையில் அரசு அலுவலர்களுக்கான தீபாவளி சிறப்பு தொகுப்பு விற்பனை துவக்கம்

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் பாஸ்கர பாண்டியன் நேற்று மாவட்ட ஆட்சியர் அலுவலக பெருந் திட்ட வளாகத்தில் உள்ள மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூட்டரங்கில் தமிழ்நாடு மாநில ஊரக/நகர்புற வாழ்வாதார இயக்கத்தின் கீழ் செயல்படும் மகளிர் திட்டம் சார்பாக அரசு அலுவலர்களுக்கான தீபாவளி சிறப்பு தொகுப்பு விற்பனையினை துவக்கி வைத்தார்கள்.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திருவண்ணாமலை மாவட்டம் தமிழ்நாடு ஊரக, நகர்புற வாழ்வாதார இயக்கத்தில் செயல்படும் மகளிர் சுயஉதவிக்குழு உறுப்பினர்களை கொண்டு உற்பத்தி செய்யப்படும் பொருட்கள் அடங்கிய தீபாவளி சிறப்பு தொகுப்பு மற்றும் மர செக்கு எண்ணெய் விற்பனை துவங்கப்பட்டுள்ளது.

அனைத்து அரசு அலுவலகங்களிலும் பணி புரியும் அலுவலர்களும் பய னடையும் வகையில் தீபாவளி தொகுப்பு விற்பனையினை மாவட்ட ஆட்சித்தலைவர் தெ.பாஸ்கர பாண்டியன் துவங்கி வைத்தார். இதன் மூலம் மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் பயனடைவர் என தெரிவித்தார்கள்.

இந்நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர் இராம்பிர தீபன், திருவண்ணாமலை வரு வாய் கோட்டாட்சியர்கள் மந்தாகினி, ஆரணி வரு வாய் கோட்டாட்சியர் பால சுப்பிரமணியன், திட்ட இயக்குநர் (மகளிர் திட்டம்) சரணியாதேவி மற்றும் அரசு துறைச்சார்ந்த அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img