fbpx
Homeபிற செய்திகள்செந்தில்பாலாஜிக்கு ஜாமீன்: மேட்டுப்பாளையத்தில் திமுகவினர் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்

செந்தில்பாலாஜிக்கு ஜாமீன்: மேட்டுப்பாளையத்தில் திமுகவினர் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கிடைத்ததை ஒட்டி மேட்டுப்பாளையத்தில் பேருந்து நிலையம் அருகே நகர செயலாளர்கள் முனுசாமி, முகமது யூனூஸ் தலைமையில் முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர் பா.அருண்குமார் முன்னிலையில் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்தனர்.
தொடர்ந்து பொது மக்களுக்கு இனிப்பு வழங்கினர். நிகழ்ச்சியில் தலைமை செயற்குழு உறுப்பினர் அஷ்ரப்அலி,நகர மன்ற தலைவர் மெஹரிபா பர்வீன் அஷ்ரப் அலி, நகர்மன்ற துணை தலைவர் அருள்வடிவு முனுசாமி, நகர்மன்ற உறுப்பினர்கள் ரவிக்குமார், ஓ.கே.நடராஜ், சிவமலர்,மாவட்ட தொழிலாளர் அணி துணைத் தலைவர் ரமேஷ் குமார், கலை இலக்கிய பிரிவு துணை அமைப்பாளர் கலிங்கா கணேசன்,வினோத், மகேஷ், ரஹூம், சுதீஷ் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img