ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏ வி.சி சந்திரகுமார் ஈரோடு ஜோஸ் ஆலுக்காஸ் நிறுவனத்தின் 19வது ஆண்டு விழாவை குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் மாநகர மாமன்ற உறுப்பினர் செல்லபொன்னி மனோகரன், திமுக கோட்டை பகுதி செயலாளர் ராமச்சந்திரன், டாக்டர் அபுல் ஹாசன், நிறுவனத்தின் மண்டல மேலாளர் சுனில், மேலாளர் பிரசாந்த், துணை மேலாளர் வினோத் ஆகியோர் கலந்து கொண்டனர்.
விழாவையொட்டி ரூ.75 ஆயிரத்துக்கு மேல் தங்க நகை வாங்குபவர்களுக்கு தங்க நாணயம், வைர நகைகளுக்கு விலையில் ரூ.15 ஆயிரம் தள்ளுபடியும் தங்க நாணயமும் இலவசமாக வழங்கப்படுகிறது.