திருப்பூர் மாவட்டம் சுவரன் மாறன் கல்வி அறக்கட்டளை மற்றும் பிரகாஷ் ஆர்ட் கேலரி இணைந்து நடத்தும் ஓவிய பள்ளி சார்பில் இன்று திருப்பூர் அரசு பள்ளியில் இலவச ஓவிய பயிற்சி நடத்தப்பட்டது.
இதில் பிரகாஷ் ஆர்ட் கேலரி உரிமையாளர் மற்றும் சுவரன் மாறன் கல்வி அறக்கட்டளையை சேர்ந்த தர்மராஜ் ஆகியோர் பயிற்சி அளித்தனர்.
மேலும் திருப்பூர் மாவட்டத்தில் அரசு சார்பாக வரும் ஞாயிற்றுக்கிழமை கலை போட்டிகள் நடைபெறுகிறது. இந்த கலை போட்டியில் ஓவிய போட்டியாளர்களாக தர்மராஜிடம் பயிற்சி பெற்ற மாணவர்கள் 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொள்கிறார்கள்.
இதில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு மாநில அளவில் போட்டிகளில் கலந்து கொள்ள வாய்ப்பு அளிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.