fbpx
Homeபிற செய்திகள்ஜி.கே.என்.எம். மருத்துவமனையில் நுரையீரல் உயர் ரத்த அழுத்த கிளினிக் துவக்கம்

ஜி.கே.என்.எம். மருத்துவமனையில் நுரையீரல் உயர் ரத்த அழுத்த கிளினிக் துவக்கம்

நுரையீரல் உயர் ரத்த அழுத்த நோயினை நவீன மருத்துவ முறையில் கண்டறியவும் மற்றும் இந்த நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மேம் பட்ட மருத்துவ சிகிச்சைகள் அளிப்பதற்கும் பிரத்தியேக நுரையீரல் உயர் ரத்த அழுத்த கிளினிக் துவக்கப்பட்டுள்ளது என ஜி.கே.என்.எம். மருத்துவமனை தெரிவித்துள்ளது.

நுரையீரல் உயர் இரத்த அழுத்த நோய்க்கு சிகிச்சை அளிப்பதற்கு மருத்துவ துறையில் ஏற்பட்டுள்ள சமீபத்திய முன்னேற்றங்கள் மற்றும் சிகிச்சை உத்திகள் குறித்து மருத்துவர்களின் திறனை மேம்படுத்துவதை நோக்கமாக இந்த கிளினிக் தொடங்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில் இருதயவியல், நுரையீரல் மற்றும் ரூமாட்டாலஜி துறையின் புகழ்பெற்ற மருத்துவ நிபுணர்கள் கலந்து கொண்டனர். அவர்கள், நோய், அதனை கையாளுதல், நோயாளிகளை குணம் பெறச் செய்தல் உள்ளிட்டவை குறித்து பேசினர்.

படிக்க வேண்டும்

spot_img