கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் வட்டம், சிறுமுகை கிராமம் முத்துசாமி திருமண மண்டபத்தில் நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில் பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் பாடி வழங்கினார்.
இம்முகாமில் மேட்டுப்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் செல்வராஜ், கோவை வடக்கு வருவாய் கோட்டாட்சியர் கோவிந்தன், காரமடை ஊராட்சி ஒன்றிய தலைவர் மணிமேகலை, சிறுமுகை பேரூராட்சி தலைவர் மாலதி உதயகுமார், துணைத் தலைவர் செந்தில்குமார், தனித்துணை ஆட்சியர் சமூக பாதுகாப்பு திட்டம் சுரேஷ், காரமடை வட்டாட்சியர் வாசுதேவன் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.