fbpx
Homeபிற செய்திகள்கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூரியில் இந்தியன் வங்கி கிளை துவக்கம்

கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூரியில் இந்தியன் வங்கி கிளை துவக்கம்

கள்ளக்குறிச்சியில் அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் தனது புதிய வங்கிக் கிளையை இந்தியன் வங்கி தொடங்கியிருக்கிறது. இந்தியன் வங்கியின் செயலாக்க இயக்குனர் மகேஷ் குமார் பஜாஜ் புதிய வங்கிக்கிளையை அதிகாரப்பூர்வமாக திறந்து வைத்தார். இத்திறப்பு விழா நிகழ்வில் வங்கியின் முதுநிலை அதிகாரிகள், உள்ளூர் பிரமுகர்கள் மற்றும் மருத்துவக் கல்லூரி அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் பங்கேற்றனர்.

இந்த வங்கிக்கிளை, தொடக்கத்தின் ஒரு அங்கமாக, பல்வேறு திட்டங்களின் கீழ் ரூ.18.78 கோடி என்ற மொத்த மதிப்பிற்கு நிதியுதவிக்கான ஒப்புதல் கடிதங்களைப் பயனாளிகளுக்கு வழங்கினார்.

இதில் வீட்டுக்கடன்கள், தனிநபர் கடன்கள், MSME கால (டெர்ம்) கடன்கள் மற்றும் PMEGP (பிரதம மந்திரியின் வேலைவாய்ப்பு உருவாக்க திட்டம்) திட்டம் ஆகியவை உள்ளடங்கும்.
இந்தியன் வங்கி சென்னையின் கள செயல்பாடுகளுக்கான பொதுமேலாளர் வெங்கடேசன், மண்டல மேலாளர் கடலூர் கௌரி சங்கர் ராவ் ஆகியோர் பங்கேற்ற இந்நிகழ்வில் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூரியின் டீன் டாக் டர். வி.பவானி முன்னிலை வகித்தார். கள்ளக்குறிச்சி இந்தியன் வங்கியின் மேலாளர் ராம்குமார் மற்றும் உள்ளூர் பிரமுகர்களுடன், பொதுமக்களும் இந் நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

படிக்க வேண்டும்

spot_img