fbpx
Homeபிற செய்திகள்நேஷனல் மான்டிசேரி பிளே ஸ்கூல் திறப்பு விழா

நேஷனல் மான்டிசேரி பிளே ஸ்கூல் திறப்பு விழா

திருப்பூர் மாவட்டம், கொளத்துப்பாளையம் பேரூராட்சி பகுதியில் நேஷனல் மான்டிசேரி பிளே பள்ளி திறப்பு விழா கொளத்துப்பாளையம் பேரூராட்சி கழக செய லாளரும், பேரூராட்சி துணைத்தலைவருமான துரைசாமி தலைமையில் கொளத்துப்பாளையம் பேரூராட்சி தலைவர் சுதா கருப்புச்சாமி, செல்வகுமார் முன்னிலையில் நடைபெற்றது.

இதில் நேஷனல் பிளே பள்ளி முதல்வர் ரேஷ்மி முபாரக் வர வேற்றுப் பேசினார். கொளத்துப்பாளையம் அரசினர் மேல்நிலைப் பள்ளி மேனாள் தலைமை ஆசிரியர் பெரியசாமி, நேஷனல் பள்ளி தாளாளர் சர்தார், கொளத்துப் பாளையம் பேரூராட்சி முன்னாள் தலைவர் தமிழ்செல்வி ஆகியோர் பள்ளி வகுப்புகளை திறந்து வைத்தனர்.

சாரா நர்சிங் கல்லூரி நிறுவனர் டாக்டர் ஜெய்லானி சிறப்பு விருந் தினராக கலந்து கொண்டு பேசினார். நிகழ்ச்சியில் ஓய்வு பெற்ற ஆசிரியர் ஹாஜி. உபைத்துல்லா முல்க், குமாரபாளையம் ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் முத்து ஸ்டீபன், கரூர் ஜாமியா பள்ளி ஜபுர்தீன் ஆகியோர் பேசி னர். இதில் வாணியம்பாடி மருதர் கேசரி ஜெயின் மகளிர் கல்லூரி பேராசி ரியை சல்மா பர்வீன் நன்றி கூறினார்.

படிக்க வேண்டும்

spot_img