fbpx
Homeபிற செய்திகள்எஸ்.பி.ஓ.ஏ மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் மாணவர் தலைவர்கள் பதவியேற்பு விழா

எஸ்.பி.ஓ.ஏ மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் மாணவர் தலைவர்கள் பதவியேற்பு விழா

கோவை, சொக்கம்புதூர், எஸ்.பி.ஓ.ஏ மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நேற்று காலை 9.30 மணிக்கு மாணவத் தலைவர்கள் பதவியேற்பு விழா மற்றும் தனித் திறன் செயல்பாட்டுத் துவக்க விழா நடைபெற்றது.

பள்ளி மாணவ, மாண வியர் தலைவி பி.எல்.தர்ஷினி கண்ணாத்தாள் வரவேற்புரையாற் றினார். துணை தலைவர் ஜீவா செந்தில் விருந்தினர்களை அறி முகப்படுத்தினார். விழாவிற்கு கோவை எஸ்.பி.ஓ.ஏ பள்ளிகளின் தாளாளர் எம்.முருகேசன் தலைமை வகித்து விருந்தினர்களைக் கௌர வித்தார். சேரன், சோழன், பாண்டியன், பல்லவன் ஆகிய நான்கு இல்லங் களுக்கு புதிதாக நியமிக்கப் பட்ட தலைவர்கள் பொறுப்பேற்றுக் கொண்டனர்.

விழாவில் பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் தலைவர் எஸ்.செல்வகுமார் சிறப்புரை ஆற் றினார். துணைத் தலைவர் சி.ஆர்.ராம்குமார், உறுப்பினர் டி.ஆர்.விஜயகுமார் கலந்து கொண்டு சிறப்பித்தனர். முன்னாள் மாணவி மற்றும் நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் நிறுவனத்தின் நிர்வாக அதிகாரி (சட்டம்) அபர்ணா சமூக சேவை யின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி உரையாற்றினார்.

சிறப்பு விருந்தினராக கோவை, என்சிசி குழும தலைமையகத்தின் நிர்வாக அதிகாரி சுவாமி கலந்து கொண்டு, மாணவர்களின் வாழ்க்கை யில் ஒழுக்கம் மற்றும் தலைமைப் பண்பின் முக்கியத்துவத்தை எடுத் துரைத்தார்.
பள்ளியின் துணை மாணவர் தலைவரான பி.சௌத்ரி நன்றி கூற பல்வேறு கலை நிகழ்ச்சிகளுடன் விழா நிறைவடைந்தது.

படிக்க வேண்டும்

spot_img