fbpx
Homeபிற செய்திகள்பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு ஊக்கத்தொகை: மார்கண்டேயன் எம்எல்ஏ வழங்கினார்

பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு ஊக்கத்தொகை: மார்கண்டேயன் எம்எல்ஏ வழங்கினார்

எட்டயபுரம் தனியார் திருமண மண்டபத்தில் செங்குந்த மகாஜனம் சார்பில் 2024-ம் ஆண்டு கல்வியாண்டில் தூத்துக்குடி மாவட்டத்தில் 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் உயர் மதிப்பெண் பெற்ற மாணவ – மாணவிகளுக்கு பரிசளிப்பு விழா நடந்தது. இதில் விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்கண்டேயன் கலந்து கொண்டு பரிசுகள் மற்றும் ஊக்கத்தொகை வழங்கி சிறப்புரையாற்றினார்.

நிகழ்வில் கோவில்பட்டி கிழக்கு ஒன்றிய செயலாளர் நவநீதக்கண்ணன், தூத்துக்குடி மாவட்ட செங்குந்தர் மகாஜன சங்க தலைவர் ஜேசிபி சங்கரநாராயணன், எட்டையாபுரம் பேரூர் திமுக செயலாளர் பாரதி கணேசன், தூத்துக்குடி வடக்கு மாவட்ட முன்னாள் இளைஞரணி துணை அமைப்பாளர் இமானுவேல், எட்டையாபுரம் பேரூராட்சி மன்ற துணைத் தலைவர் கதிர்வேல், தூத்துக்குடி வடக்கு மாவட்ட வர்த்தக அணி துணை அமைப்பாளர் எம்.ஆர்.முனியசாமி, எட்டையாபுரம் பாரதி மில் முன்னாள் சேர்மன் ஆழ்வார் உதயகுமார் சூரங்குடி கூட்டுறவு சங்க செயலாளர் ராமச்சந்திரன், பேரூர் திமுக துணைச் செயலாளர் மாரியப்பன், வார்டு செயலாளர் அருள் சுந்தர், பேரூர் கழக நிர்வாகிகள் மாரிமுத்து, பாண்டியன்,முத்து முனியசாமி, குருசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img