பள்ளிக்கல்வித்துறை சார்பில் நடத்தப்படும் பள்ளிகளுக்கு இடையேயான, கரூர் மாவட்ட தடகள போட்டி டிஎன்பி எல் விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.
இதில் வெண்ணைமலை சேரன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். தொடர்ந்து மாணவர்கள் பிரிவில் ஒட்டு மொத்த சாம்பியன்ஷிப் பட்டம் பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளனர்.
மேலும் 14 வயதுக்குட்பட்ட மாணவிகள் பிரிவில் குண்டு எறிதலில் எஸ்.ஹர்ஷா ஸ்ரீ மூன்றாம் இடம் பெற்றுள்ளார். 14 வயதுக்குட்பட்ட மாணவர்கள் பிரிவில், எஸ்.நிலவரசு வட்டு எறிதலில் முதலிடமும் ஜே,சச்சின் குண்டு எறிதலில் இரண்டாம் இடமும் பெற்றனர்.
19 வயதுக்குட்பட்ட பிரிவில் 12ம் வகுப்பு மாணவன் எம். கதிர் 100 மீட்டர், 200 மீட்டர், 400 மீட்டர் மூன்றிலும் முத லிடம், எஸ்.தேவபிரகாஷ் 800 மீட்டர், 400 மீட்டர் தடை தாண்டும் போட்டிகளில் முதலிடம், 400 மீட்டர் ஓட்டத்தில் இரண்டாம் இடமும் பெற்றுள்ளார்.
இதில் எம்.கதிர் 12ம் வகுப்பு மாணவன் சாம்பியன்ஷிப் பட்டத்தை பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளார்.
தொடர்ந்து வெற்றி பெற்றவர்களை பள்ளியின் செயலாளர் பெரியசாமி, பள்ளியின் தாளாளர் பாண்டியன், பள்ளி முதல்வர் பழனியப்பன் ஆகியோர் பாராட்டினர்.