fbpx
Homeபிற செய்திகள்கள்ளக்குறிச்சி கனவு இல்ல திட்டப்பயனாளி முதல்வருக்கு நன்றி தெரிவிப்பு

கள்ளக்குறிச்சி கனவு இல்ல திட்டப்பயனாளி முதல்வருக்கு நன்றி தெரிவிப்பு

கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் ஊராட்சி ஒன்றியத்தில் ஊரக வளர்ச்சித் துறையின் சார்பில் கலைஞரின் கனவு இல்லத் திட்டப் பயனாளிகள் சந்திப்பு நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் பிரசாந்த் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சித்தலைவர் கலைஞரின் கனவு இல்லத் திட்டப் பயனாளிகளிடம் திட்டத்தின் பயன்கள் மற்றும் கருத்துகள் குறித்து நிறைந்த மனது நிகழ்ச்சியில் கேட்டறிந்த போது வீடு கட்டும் திட்டம் குறித்து பயனாளிகள் நிறைந்த மனதுடன் தமிழக அரசிற்கு நன்றி தெரிவித்தனர்.

இது குறித்து கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் ஒன்றியம், காளசமுத்திரம் கிராமத்தை சேர்ந்த கலைஞரின் கனவு இல்லத் திட்டப் பயனாளி மகேஷ்வரி கூறியதாவது:

எனது பெயர் மகேஷ்வரி. நான் காளசமுத்திரம் கிராமத்தில் வசித்து வருகிறேன். எனது கணவர் விவசாய கூலி வேலை செய்து வருகிறார். தற்பொழுது நாங்கள் குடிசை வீட்டில் வாழ்ந்து வருகிறோம். இந்நிலையில் கலைஞரின் கனவு இல்லத் திட்டத்தின்கீழ் புதிய வீடு கட்டுவதற்கான பணி ஆணை வழங்கப்பட்டு புதிய வீடு கட்டும் பணியினை தொடங்கியுள்ளோம். இத்திட்டத்தின் கீழ் புதிய வீடு கட்டுவதற்கு தமிழக அரசு ரூ.3.50 லட்சம் வழங்கியுள்ளது.

தமிழ்நாடு முதலமைச்சருக்கு எனது சார்பிலும், எனது குடும்பத்தினர் சார்பிலும் நிறைந்த மனதுடன் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.

படிக்க வேண்டும்

spot_img