fbpx
Homeபிற செய்திகள்ரூ.35 லட்சம் மதிப்பீட்டில் நலஉதவிகளை வழங்கி வாழ்த்திய கரூர் கலெக்டர் தங்கவேல்

ரூ.35 லட்சம் மதிப்பீட்டில் நலஉதவிகளை வழங்கி வாழ்த்திய கரூர் கலெக்டர் தங்கவேல்

கரூர் மாவட்டம், கடவூர் தாலுகா, வரவ ணை கிராமத்தில் உள்ள காணியாளம்பட்டி தனியார் திருமண மண்டபத்தில் மாவட்ட ஆட்சியரின் மக்கள் தொடர்பு திட்ட முகாம் மாவட்ட ஆட்சியர் தங்கவேல் தலைமையில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் கிருஷ்ணராயபுரம் எம்எல்ஏ சிவகாமசுந்தரி, பல்வேறு அரசு துறைகளைச் சேர்ந்த அரசு அதிகாரிகள், பயனாளிகள் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

ஏற்கனவே பொதுமக்க ளிடமிருந்து பெறப்பட்ட மனுக்களின் மீது மேற் கொள்ளப்பட்ட நடவடிக்கைகளின் பேரில், பயனளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

இதன் அடிப்படையில் வருவாய் துறை சார்பில் வீட்டுமனை பட்டா, ஆதிதிராவிடர் இணைய வழிபட்டா, நத்தம் பட்டா மாறுதல், இணைய வழி பட்டா மாறுதல், விதவைச் சான்று, தடை இன்மைச் சான்று, உதவித்தொகை, கூட்டுறவு துறை, ஊரக வளர்ச்சி துறை, வேளாண்மை – உழவர் நலத்துறை, தோட்டக்கலை துறை மற்றும் ஊரக வளர்ச்சித் துறை உள்ளிட்ட துறைகளின் மூலம் மொத்தம் நேற்று மட்டும் 133 பயனாளிகளுக்கு 35 லட்சத்து 18 ஆயிரத்து 805- ரூபாய் மதிப்பில் நலத்திட்டங்களை வழங்கி வாழ்த்து தெரிவித்தார் மாவட்ட ஆட்சியர் தங்க வேல்.

அரசின் உதவிகளை பெற்றுக் கொண்ட பயனாளிகள் மாவட்ட ஆட்சியருக்கும் தமிழக அரசுக்கும் நன்றி தெரி வித்தனர்.

படிக்க வேண்டும்

spot_img