பக்கவாதம் தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கத்துடன் கோவையின் முன்னணி மருத்து வமனையான கேஎம்சிஹெச் மருத்துவமனை, கோவை மாரத்தான் நிகழ்ச்சியை நடத்தியது.
இந்த “கேஎம்சிஹெச் கோவை மாராத்தான் 2024” நிகழ்ச்சியை கோவை மாநகராட்சி மேயர் ரங்கநாயகி, கேஎம்சிஹெச் மருத்துவமனை தலைவர் டாக்டர் நல்லா ஜி பழனிசாமி முன்னிலையில் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
இதில் 4000 பேர் கலந்து கொண்டனர்.
18 கிலோ மீட்டர் தொலைவிலான இந்த மாரத்தான் கேஎம்சிஹெச் கோவில்பாளையம் மருத்துவமனையில் துவங்கி அவினாசி ரோடு கேஎம்சிஹெச் மருத்துவமனையில் நிறைவுற்றது.
இது குறித்து கேஎம்சிஹெச் மருத்துவமனை தலைவர் டாக்டர் நல்லா ஜி பழனிசாமி கூறுகையில், “உரிய சிகிச்சைகளை விரைவாகவும் முன் கூட்டியே எடுத்தால்
பக்கவாதத்தால் ஏற்படக்கூடிய பெரும் பாலான பின்விளைவுகளைத் தவிர்த்துவிடலாம்“ என்றார்.
இந்த மாரத்தான் நிகழ்ச்சியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுத் தொகையும் கலந்து கொண்டவர்களுக்கு சான்றி தழ்களும் வழங்கப்பட்டன.