fbpx
Homeபிற செய்திகள்‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்டம்: காட்டுமன்னார்கோவிலில் ஆட்சியர் ஆய்வு

‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்டம்: காட்டுமன்னார்கோவிலில் ஆட்சியர் ஆய்வு

உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ், கடலூர் மாவட்டம், காட்டுமன்னார் கோவிலில் ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் புதன் கிழமை ஆய்வு மேற்கொண்டார்.
குமராட்சி வேளாண்துறை சார்பில் நெல் பயிரில் பயறு வகை சாகுபடி பெருக்கத் திட்டத்தின் கீழ், ட்ரோன் மூலம் மருந்து தெளிப்பு முறையை பார்வையிட்ட ஆட்சியர், ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் அதிகாரிகளுடன் கலந்தாய்வு மேற்கொண்டார்.

தொடர்ந்து, புதிதாக கட்டப்பட்டு வரும் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை பார்வையிட்ட ஆட்சியர் ஆயங்குடியில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் மூலம் ஊராட்சி அளவிலான குழு கூட்டமைப்புக்கு செயற்கை ஆபரணங்கள் தயாரிப்பதற்கான பயிற்சி அளிப்பதையும், எய்யலூர் ஊராட்சி ஒன்றிய நடு நிலைப்பள்ளி ஆசிரியர்கள் கல்வித்துறை அதிகாரியுடன் மாணவர்களின் கற்றல் திறனை ஆய்வு செய்தார்.

இதைத்தொடர்ந்து, காட்டுமன்னார் கோவில் வட்டாட்சியர் அலுவலகத்தில் பொது மக்களிடமிருந்து ஆட்சியர் மனுக்களை பெற்றார். பின்னர், தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற அதிகாரிகள் ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்று திட்டப் பணிகளை விரைந்து முடிக்குமாறு அறிவுறுத்தினார். ஆய்வின்போது, கூடுதல் ஆட்சியர் ஆர்.சரண்யா, நீர்வ ளத்துறை சிதம்பரம் செயற் பொறியாளர் காந்தரூபன், கீழணை உதவி செயற் பொறியாளர் கொளஞ்சிநாதன், நெடுஞ்சாலைத்துறை உதவி இயக்கு நர்சந்தோஷ்குமார், தமிழ்நாடு மின்பகிர்மான கழக உதவி செயற்பொறி யாளர் ஆர்.புகழேந்தி, காட்டு மன்னார்கோவில் வட்டாட்சியர் சிவக்குமார், வேளாண் உதவி இயக்குநர் (பொ) உமா தேவி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img