fbpx
Homeபிற செய்திகள்பொதுமக்களிடம் மனுக்கள் பெற்ற மேயர் ஜெகன் பெரியசாமி

பொதுமக்களிடம் மனுக்கள் பெற்ற மேயர் ஜெகன் பெரியசாமி

தூத்துக்குடி மாநகர £ட்சி வடக்கு மண்டல அலுவலகத்தில் நடைபெற்ற பகுதி சபா கூட்டத்தில் மேயர் ஜெகன் பெரியசாமி கலந்து கொண்டு பொது மக்களிடம் மனுக்களை பெற்றார்.

தூத்துக்குடி மாநகர பகுதிகளில் அரசின் பல்வேறு திட்டங்களின் வாயிலாக அடிப்படை கட்டமைப்பு வசதிகள் நிறைவேற்றப்பட்டு வருகின்றன. மேலும் பகுதி சபா கூட்டங்களும் உரிய காலங்களில் நடத்தப்பட்டு பொதுமக்களிடமிருந்து வரப்பெறும் கோரிக்கைகள் அனைத்தும் முறையாக பரிசீலிக்கப்பட்டு முன்னுரிமை அடிப்ப டையில் பணிகள் நிறை வேற்றப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், பொது மக்களின் கோரிக்கைகளை விரைந்து முடிக்கும் வகையில் ஒவ்வொரு வாரமும் புதன் கிழமை தோறும் மண்டலம் வாரியாக கோரிக்கைகளை கேட்டு அறிந்து உடனடியாக நிவர்த்தி செய்யும் வகையில் மேயர் அவர்கள் தலைமையில் தொடர்புடைய அலுவலர்கள் மண்டல வாரியாக முகாம்களில் கலந்து கொள்ள உத்தேசிக்கப்பட்டுள்ளது.

இதன்படி வடக்கு மண்டல அலுவலகத்தில் பகுதி சபா கூட்டம் மேயர் ஜெகன் பெரியசாமி தலை மையில் நடந்தது. இதில் வார்டு எண்கள் 1 முதல் 14 மற்றும் 20 பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் மேயரிடம் மனு அளித்தனர்.

மாநகராட்சி ஆணையர் மதுபாலன், துணை மேயர் ஜெனிட்டா செல்வராஜ் மாநகர துணை செயலாளரும் மாமன்ற உறுப்பினருமான கீதா முருகேசன், பகுதி கழக செயலாளரும் மண்டல தலைவருமான தொ.நிர்மல்ராஜ், மாமன்ற உறுப்பினர்கள் ரெங்கசாமி, காந்திமணி ஜெயசீலி, கர்ப்பககனி, மரிய சுதா, சுப்புலட்சுமி, பவானி, நாகேஸ்வரி, அந்தோணி மார்ஷலின், பொறியாளர் பாஸ்கர் உதவி பொறியாளர் சரவணன் செயற்பொறியாளர் ரெங்க நாதன் உதவி பொறியாளர் ராமசந்திரன் உதவி பொறியாளர் பிரின்ஸ் ராஜேந்திரன் உதவி ஆணையர் பொருப்பு நரசிம்மன் மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img