fbpx
Homeபிற செய்திகள்ஈரோட்டில் புதுப்பிக்கப்பட்ட போக்குவரத்து விழிப்புணர்வு பூங்கா மேயர் நாகரத்தினம் திறந்து வைத்தார்

ஈரோட்டில் புதுப்பிக்கப்பட்ட போக்குவரத்து விழிப்புணர்வு பூங்கா மேயர் நாகரத்தினம் திறந்து வைத்தார்

ஈரோடு மோளகவுண்டம்பாளையத்தில், மாநகராட்சி ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட போக்குவரத்து விழிப்புணர்வு பூங்கா உள்ளது. இந்த பூங்காவில் சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு பலகைகள் வைக்கப்பட்டு உள்ளன. மேலும், சாலை விதிமுறைகள், சாலையோரம் உள்ள குறியீட்டுக்கான விளக்கம், வாகன ஓட்டுனர் உரிமம் விண்ணப்பிக்க தெரிந்து கொள்ள வேண்டிய வழிமுறைகள் ஆகியவற்றை பொதுமக்கள் எளிமையாக அறிந்து கொள்ளும் வகையில் விழிப்புணர்வு பலகைகள் வைக்கப்பட்டு உள்ளன.

இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளாக பராமரிப்பின்றி காணப்பட்ட இப்பூங்கா, தற்போது ஒளிரும் ஈரோடு பவுண்டேஷன் அமைப்பின் சார்பில் புதுப்பிக்கப்பட்டது. இதனையடுத்து, பூங்காவை மாநகராட்சி மேயர் நாகரத்தினம் திறந்து வைத்தார்.

பிரகாஷ் எம்.பி, மாவட்ட எஸ்பி ஜவஹர், மாநகராட்சி ஆணையாளர் மனிஷ், தலைமை பொறியாளர் விஜயகுமார், எஸ்கேஎம் பூரண ஆயில் நிர்வாக இயக்குனர் சந்திரசேகர் மற்றும் ஒளிரும் ஈரோடு பவுண்டேஷன் நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.
முன்னதாக, நிகழ்ச்சியில் ஒளிரும் ஈரோடு பவுண்டேஷன் தலைவர் சின்னசாமி வரவேற்று பேசினார்.

படிக்க வேண்டும்

spot_img