செங்கல்பட்டு மாவட்டம் ஒத்திவாக்கத்தில் அமைந்துள்ள தமிழ்நாடு அதிதீவிர படை பயிற்சி பள்ளி மையம் துப்பாக்கிச் சுடு தளத்தில் மாநில காவல் துறையினருக்கான துப்பாக்கி சுடுதல் போட்டி 3நாட்கள் நடைபெற்றது.
இப்போட்டியில் நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு ஊரக காவல் நிலைய காவல் ஆய்வாளர் தீபா கலந்து கொண்டு மூன்றாம் இடம் பிடித்து வெண்கல பதக்கமும், நாமக்கல் ஆயுதப்படையை சேர்ந்த பெண் காவலர் கீதா கலந்து கொண்டு இரண்டு தங்கப் பதக்கமும் ஒரு வெள்ளி பதக்கமும் பெற்று முதலிடம் பிடித்து நாமக்கல் மாவட்ட காவல்துறையினருக்கு பெருமையை சேர்த்துள்ளனர்.
வெற்றி பெற்ற காவலர்கள் நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ச.ராஜேஸ் கண்ணன் சந்தித்து வாழ்த்துக்களை பெற்றனர். உடன் நாமக்கல் மாவட்ட ஆயுதப்படை காவல் துணை கண்காணிப்பாளர் இளங்கோவன் உள்ளார்.