fbpx
Homeபிற செய்திகள்யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா சார்பில் தேசிய பொது விழிப்புணர்வு வினாடி வினா போட்டி

யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா சார்பில் தேசிய பொது விழிப்புணர்வு வினாடி வினா போட்டி

யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா சார்பில் அகில இந்திய அளவில் தேசிய பொது விழிப்புணர்வு வினாடி வினா போட்டியை யூ – ஜீனியஸ் 3.0 என்ற தலைப்பில் நடத்தி வருகிறது. இதன் கோவை நகரம் மற்றும் மண்டல இறுதிச்சுற்றுப் போட்டிகள், இந்துஸ்தான் கலை மற்றும் அறிவியல் கல்லூரி பாரதியார் அரங்கத்தில் இன்று காலை நடந்தது. இதனை வங்கியின் மண்டலத் தலைவர் (சென்னை) சத்யபன் பெஹரா குத்துவிளக்கேற்றி துவக்கிவைத்தார். அருகில் யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா பிராந்திய தலைவர்கள் எஸ்.எஸ்.லாவண்யா (கோவை), எம்.செல்லதுரை (திருப்பூர்), பி.எம்.செந்தில்குமார் (சேலம்) மற்றும் கோவை மாநகர போக்குவரத்து போலீஸ் துணை ஆணையர் அசோக்குமார், வனமரபியல் மற்றும் மர பெருக்கு நிறுவன இயக்குனர் சி.குண்ணி கண்ணன் ஆகியோர் உள்ளனர்

படிக்க வேண்டும்

spot_img