fbpx
Homeபிற செய்திகள்தேனியில் நவசமாஜ் சேரிட்டபிள் சொசைட்டி ஐம்பெரும் விழா

தேனியில் நவசமாஜ் சேரிட்டபிள் சொசைட்டி ஐம்பெரும் விழா

தேனியில் நவசமாஜ் சேரிட்டபிள் சொசைட்டி சார்பில் ஐம்பெரும் விழா மாவட்ட தலைவர் ஆனந்தகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது. முதலில் மூன்றாம் ஆண்டு துவக்க விழாவும், சிறந்த மதிப்பெண் பெற்ற 10, 12 ஆம் வகுப்பு மாணவ மாணவிகளுக்கு பரிசளிப்பு விழா, இராணுவ வீரர்கள், தியாகிகளுக்கு கௌரவிக்கும் விழாவும், சாதனையாளர்கள் எழுத்தாளர்களுக்கு பாராட்டு விழாவும், பணி நிறைவு பெற்றவர்களுக்கு பாராட்டு விழாவும் நடைபெற்றது.

மாவட்ட செயலாளர் மாரிமுத்து, மாவட்ட செயற்குழு உறுப்பினர் ரிறிஸி பவுண்டேசன் மற்றும் மருத்துவமனை பாண்டி ஆகியோர் வரவேற்புரை ஆற்றினர். மாநில தலைவர் முனைவர் அன்பானந்தம், இஸ்ரோ விஞ்ஞானி பூமணி ஆகியோர் விழா பேருரையாற்றினார்.

இந்த விழாவிற்கு முன்னதாக ஆசிரியை இரா நித்தியப்பிரியாவின் நினைவு படத்திறப்பு விழா நடைபெற்றது. மேலும் எழுத்தாளர் பா.ராஜேஸ்குமார், சிறுகதை எழுத்தாளர் இர அறிவழகன், கவிஞர் நடராஜ் பாரதிதாஸ் ஆகிய எழுத்தாளர்களுக்கு கௌரவிக்கும் நிகழ்வு நடைப்பெற்றது. மாணவ மாணவிகளின் கலைநிகழ்ச்சி நடைபெற்றது.

படிக்க வேண்டும்

spot_img