fbpx
Homeபிற செய்திகள்வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை: மார்கண்டேயன் எம்எல்ஏ தலைமையில் அதிகாரிகளுடன் ஆய்வுக் கூட்டம்

வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை: மார்கண்டேயன் எம்எல்ஏ தலைமையில் அதிகாரிகளுடன் ஆய்வுக் கூட்டம்

வடகிழக்கு பருவமழை முன் னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்கண்டேயன் எம்எல்ஏ தலைமையில் அதிகாரிகளுடன் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் சட்டமன்ற உறுப்பினர் பேசுகையில், அனைத்து பொதுப்பணித்துறை குளங்களின் மதகுகளை ஆய்வு செய்திடவும், முகாம்கள், மணல் மூட்டைகள், ஜேசிபி இயந்திரங்களை தயார் நிலையில் வைத்திடவும் அறிவுறுத்தினார்.

மேலும் மின்சாரத் துறையில் மின் வினியோகம் தடையின்றி வழங்கிடவும் சாலைகள் துண்டிக்கப்பட்டால் உடனடியாக சீர் செய்வதற்கும் அறிவுறுத்தினார்.

கூட்டத்தில் விளாத்தி குளம் வட்டாட்சியர் ராமகிருஷ்ணன் எட்டையாபுரம் வட்டாட்சியர் சங்கரநாரா யணன், கயத்தார் வட்டாட்சியர் ராகவன், விளாத்திகுளம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தங்கவேல், ஸ்ரீனிவாசன், புதூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சசிகுமார், வெங்கடாசலம் ஓட்டப்பிடாரம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கிரி, வசந்தா, கோவில்பட்டி வட்டார வளர்ச்சி அலுவலர் ஜவஹர், விளாத்திகுளம் உதவி செயற்பொறியாளர் செந்தில்குமார், கயத்தார் உதவி செயற்பொறியாளர் முனியசாமி, நீர்வளத்துறை உதவி செயற்பொறியாளர் சுபாஷ், நீர்வளத்துறை உதவி செயற்பொறியாளர் முருகன், விளாத்திகுளம் பேரூராட்சி செயல் அலுவலர்(பொறுப்பு) செந்தில்குமார், எட்டையாபுரம் பேரூராட்சி செயல் அலுவலர் மகாராஜன், எட்டையாபுரம் நீர்வளத்துறை உதவி பொறியாளர் நிவேதா, புதூர் நீர்வளத்துறை உதவி பொறியாளர் சுபலட்சுமி உட்பட துறை சார்ந்த அதி காரிகள் கலந்து கொண் டனர். விளாத்திகுளம் கிழக்கு ஒன்றிய திமுக செயலாளர் சின்னமாரிமுத்து, விளாத்திகுளம் மேற்கு ஒன்றிய செயலாளர் அன்புராஜன், தூத்துக்குடி வடக்கு மாவட்ட முன்னாள் இளைஞர் அணி துணை அமைப்பாளர் இமானுவேல் மாவட்ட பிரதிநிதி ராமலிங்கம் உள்ளிட்டோர் சட்டமன்ற உறுப்பினர்களுடன் இருந்தனர்.

படிக்க வேண்டும்

spot_img