fbpx
Homeபிற செய்திகள்சாலையில் கண்டெடுத்த பணத்தை காவல் நிலையத்தில் ஒப்படைத்தவருக்கு பாராட்டு

சாலையில் கண்டெடுத்த பணத்தை காவல் நிலையத்தில் ஒப்படைத்தவருக்கு பாராட்டு

கரூர் வடக்கு பிரதட்சணம் சாலையைச் சேர்ந்தவர் திருவேங்கடம் (66). பத்திர எழுத்தர். இவர் நேற்று முன்தினம் மதியம் ரூ.50,000 பணம், பத்திர ஆவணங்கள் மற்றும் செல்போனை ஒரு பையில் போட்டு, கரூர் பேருந்து நிலையத்தில் இருந்து வடக்கு பிரதட்சணம் சாலையில் உள்ள அவரது வீட்டுக்கு சென்றுள்ளார். அவர் செல்லும் வழியில் பையை தவறவிட்டுள்ளார்.

அப்போது அவ்வழியாக டூவீலரில் வந்த கரூர் அன்சாரி தெருவை சேர்ந்த லியாகத் உசேன் அன்சாரி கீழே கிடந்த பையை எடுத்து பார்த்தார். அதில் ரூ.50,000, பத்திர ஆவணங்கள், செல்போன் இருந்துள்ளது.

உடனே லியாகத் உசேன் அன்சாரி அதனை கரூர் நகர காவல் நிலையம் சென்று ஒப்படைத்துள்ளார். இன்ஸ்பெக்டர் மணிவண்ணன், உதவி ஆய்வாளர் நாகராஜ் ஆகியோர் செல்போன் மூலம் திருவேங்கடத்தை தொடர்புக் கொண்டு விபரம் தெரிவித்தனர்

இதையடுத்து கரூர் நகர காவல் நிலையத்திற்கு வந்த திருவேங்கடத்திடம் ரூ.50,000, பத்திர ஆவணங்கள், செல்போன் ஆகியவற்றை லியாகத் உசேன் அன்சாரி முன்னிலையில் திருவேங்கடத்திடம் காவல் துறையினர் ஒப்படைத்தனர்.

கீழே தவறவிட்ட ரூ.50,000, பத்திர ஆவணங்கள், செல்போன் ஆகியவை அரை மணி நேரத்திற்குள் திரும்பக் கிடைக் கப்பெற்றதால் மகிழ்ச்சியடைந்த திருவேங்க டம் காவல் துறையினர் மற்றும் லியாகத் உசேன் அன்சாரி ஆகியோருக்கு நன்றி தெரிவித்தார்.

லியாகத் உசைன் அன்சாரி நேர்மையை பாராட்டி காவல்துறையினர் அவருக்கு பாராட்டு தெரிவித்தனர்.

படிக்க வேண்டும்

spot_img