fbpx
Homeபிற செய்திகள்உலக சுற்றுலா தின போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு

உலக சுற்றுலா தின போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு

உலக சுற்றுலா தினம் 2024 முன்னிட்டு மாவட்ட ஆட்சித்தலைவர் அறிவுரைப்படி சுற்றுலாத்துறையின் சார்பாக விருதுநகர் அரசு அருங்காட்சியகத்துடன் இணைந்து கல்லுாரி மாணவர்களுக்கு கட்டுரைப்போட்டி, ஓவியப்போட்டி  மற்றும் வினாடி வினா போட்டிகள் நடைபெற்றது.

இவ்வாண்டிற்கான “சுற்றுலாவும் அமைதியும்” (Tourism And Peace) என்ற கருத்துருவின் அடிப்படையில் கடந்த 24.09.2024 மற்றும் 25.09.2024 ஆகிய நாட்களில் போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்ற மாணவ மாணவியருக்கான பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் மாவட்ட ஆட்சித்தலைவரால்  வழங்கப்பட்டது. 

இதில் விருதுநகர் மாவட்டத்தை சார்ந்த ராஜீக்கள் கல்லூரி ராஜபாளையம், வி.என்.எஸ்.என் கல்லூரி விருதுநகர், எஸ்.எப்.ஆர் கல்லூரி சிவகாசி, எஸ்.பி.கே கல்லுாரி அருப்புக்கோட்டை, அய்யநாடார் ஜானகி அம்மாள் கல்லுாரி சிவகாசி, கலசலிங்கம் கல்லூரி கிருஷ்ணன்கோவில் போன்ற கல்லுாரி மாணவ மாணவியர்கள் போட்டிகளில் பங்கேற்றனர்.

படிக்க வேண்டும்

spot_img