மேட்டுப்பாளையம் அடுத்துள்ள தேக்கம்பட்டி வனபத்ரகாளியம்மன் கோவில் அருகே உள்ள தனியார் தோட்டத்தில் மலைப் பாம்பு ஒன்று இடத்தை விட்டு நகர முடியாமல் படுத்திருப்பதாக வனச்சரகர் ஸ்டாலினுக்கு தகவல் வந்துள்ளது.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வனத்துறையினர் சுமார் 10 அடி நீளமுள்ள மலைப்பாம்பை பிடிக்க முற்பட்ட போது இரை ஒன்றை விழுங்கி இருப்பது தெரிய வந்தது.
இதனையடுத்து தொ டர்ந்து அதனை பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். அப்போது, மலைப்பாம்பு வாயிலிருந்து மயில் ஒன்று இறந்த நிலையில் வெளியே வந்துள்ளது.
தொடர்ந்து அந்த பாம்பை மீட்டுஉரிய பரிசோதனைக்கு பின்னர் வனச்சரகர் அறி வுறுத்தலின் பேரில் நெல்லி மலை வனப்பகுதியில் விடுவித்தனர்.