fbpx
Homeபிற செய்திகள்ராயல் கேர் மருத்துவமனையில் கல்லீரல் நோய் விழிப்புணர்வு

ராயல் கேர் மருத்துவமனையில் கல்லீரல் நோய் விழிப்புணர்வு

கல்லீரல் நோய் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும், பாதிக்கப்பட்ட நோயாளி களுக்கு தொடர்ந்து ஆதரவு வழங்கவும், ராயல் கேர் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை தனது வளாகத்தில் சிறப்பு கல்லீரல் ஆதரவு குழு நிகழ்வை
நடத்தியது.

தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் டாக்டர் மாதேஸ்வரன், ஆபத்து உள்ள வர்களுக்கு ஆரம்பத்திலேயே கல்லீரல் நோயை கண்டறிவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். மேலும், கல்லீரல் நோயா ளிகளுக்கு முழுமையான ஆதரவு மற்றும் கவனிப்பு தேவை என்றும் கூறினார்.

தொடர்ந்து கல்லீரல் ஆதரவு குழு திட்டத்தின் கீழ் கல்லீரல் சுகாதார பரிசோதனைகள் நடத்தப்பட்டன. இதில் கல்லீரல் சுகாதார பரிசோதனைகள், ரத்த பரிசோதனைகள், அல்ட்ராசவுண்ட், ஃபைப்ரோஸ்கான் போன்றவை மேற்கொள்ளப்பட்டன.

இதில் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை மற்றும் இரைப்பை அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் சவுண்டப்பன், மருத்துவ இரைப்பை குடல் மற்றும் ஹெபடாலஜி நிபுணர் டாக்டர் பி. கார்த்திகேயன், காஸ்ட்ரோஎன்டாலஜி, ஹெபடாலஜி மற்றும் இன்டர்வென்ஷனல் எண்டோஸ்கோபி நிபுணர் டாக்டர் பி. திருமால், ஆலோசகர், அறுவை சிகிச்சை இரைப்பை குடல் நிபுணர் டாக்டர் சந்தீப் சந்திரசேகர், ஆலோசகர்
மற்றும் அவசரகால மருத்துவர் டாக்டர் கண்ணன், கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை மயக்கவியல் நிபுணர் டாக்டர் முத்துகுமார், அறுவை சிகிச்சை இரைப் பை குடல் நிபுணர், ஹெச்பிபி, ஜிஐ புற்றுநோயியல் மற்றும் பெரியாட்ரிக் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் எஸ். பால்வண்ணன், தீவிர சிகிச்சை பிரிவு தலைவர் டாக்டர் சிவகுமார், கதி ரியக்க நிபுணர் டாக்டர் சம்பத்குமார் உள் ளிட்டோர் பங்கேற்றனர்.

படிக்க வேண்டும்

spot_img