fbpx
Homeபிற செய்திகள்சேலத்தில் இருந்து கொச்சி, பெங்களூருக்கு விமான சேவை- அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர்

சேலத்தில் இருந்து கொச்சி, பெங்களூருக்கு விமான சேவை- அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர்

சேலம் அருகே காமலாபுரத்தில் விமான நிலையத்திலிருந்து சென்னைக்கு பயணிகள் விமானம் இயக்கப்பட்டு வந்தது. கொரோனா பேரிடர் காலத்துக்கு பிறகு கடந்த 3 ஆண்டுகளாக விமான சேவை நடைபெறவில்லை.

இந்நிலையில் சேலம் எம்.பி. எஸ்.ஆர்.பார்த்திபன் கோரிக்கையை ஏற்று விமான போக்குவரத்து துறை மீண்டும் சேலத்தில் விமான சேவை யை தொடங்க அனுமதி அளித்தது.

இதையடுத்து அலையன்ஸ் ஏர் விமான நிறுவனத்தின் மூலம் பெங் களூரு, சேலம், கொச்சி இடையே விமான போக்குவரத்து சேவையை தொடங்க பணிகள் நடைபெற்றன.

மேலும் விமான நிலையத்தில் கூடுதல் விமானங்கள் நிறுத்த ரூ.6.50 கோடி மதிப்பில் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இந்நிலையில் சேலத்தில் இருந்து விமான சேவை தொடக்க நிகழ்ச்சி நேற்று நடந்தது.

அதன்படி அலையன்ஸ் ஏர் விமான நிறுவனம் சார்பில் 72 பயணிகள் அமர்ந்து பயணம் செய் யும் வகையிலான ஏ.டி.ஆர். ரக விமானம் பெங்களூருவில் இருந்து சேலம் விமான நிலையத்துக்கு நேற்று மதியம் 1.40 மணியளவில் வந்தது.

அங்கு பயணிகளை அமைச்சர்கள் கே.என்.நேரு, அர.சக்கரபாணி, மாவட்ட கலெக்டர் கார்மேகம், எம்.பி. எஸ்.ஆர்.பார்த்திபன், எம் எல்ஏ வக்கீல் ராஜேந்திரன், சேலம் மாநகராட்சி மேயர் ராமச்சந்திரன் ஆகியோர் வரவேற்றனர். பின்னர் சேலத்தில் இருந்து 16 பயணிகளுடன் அந்த விமானம் கொச்சிக்கு புறப் பட்டது.

படிக்க வேண்டும்

spot_img