fbpx
Homeபிற செய்திகள்செந்தில்பாலாஜி ஜாமீனில் விடுதலை - திமுக வழக்கறிஞர்கள் கொண்டாட்டம்

செந்தில்பாலாஜி ஜாமீனில் விடுதலை – திமுக வழக்கறிஞர்கள் கொண்டாட்டம்

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீனில் விடுதலையானதையொட்டி கோவை ஒருங்கி ணைத்த நீதிமன்ற வளாகம் முன், கோவை மாநகர தி.மு.க. வழக்க றிஞர் அணி அமைப்பாளர் அன்புசெழியன் தலைமையில், மாநில சட்டத்துறை இணை செயலா ளர்கள் கே.எம்.தண்டபாணி, பி.ஆர். அருள்மொழி ஆகியோர் முன்னி லையில் தி..மு.க. வழக்கறிஞர்கள் இனிப்புகள் வழங்கி கொண்டாடினார்கள். இந்த நிகழ்ச்சியில் கோவை குற்றவியல் வழக்கறிஞர்கள் சங்க முன்னாள் தலைவர் மருது பாண்டி யன், மூத்த வழக்கறிஞர் கனகராஜ் மற்றும் வழக்கறிஞர்கள் மணிவேல், ராஜமாணிக்கம், நிஜ லிங்கப்பா, முருகானந்தம், விஜயகுமார், தீபக், மது, சத்யா, ஜீவா, அன்வர் தீன், சலீம் நூருல் அமீன், குணசேகரன் உள்பட நூற்றுக்கு மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img