fbpx
Homeபிற செய்திகள்காந்தி ஜெயந்தியை முன்னிட்டு நாமக்கல்லில் சிலம்ப போட்டியில் 3,000 மாணவர்கள் அசத்தல்

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு நாமக்கல்லில் சிலம்ப போட்டியில் 3,000 மாணவர்கள் அசத்தல்

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு, நாமக்கலில் சிலம்பம் சுழற்றும் போட்டி நடைபெற்றது. இதில், 3,000 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகத்திற்கு உள்பட்ட, நேரு யுவகேந்திரா நாமக்கல் மாவட்ட கிளை மற்றும் மாவட்ட சிலம்ப ஆசான்கள், பயிற்சியாளர்கள் நலச்சங்கத்தின் சார்பில், காந்தி ஜெயந்தியை முன்னிட்டு சிலம்பம் சுழற்றும் போட்டி, மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.

இதனை சேலம், நாமக்கல் மாவட்ட முன்னாள் கல்வி அலுவலர் ஆ.உதயகுமார் கொடியசைத்து போட்டியை தொடங்கி வைத்தார். நேரு யுவகேந்திரா ஆலோசனைக் குழு உறுப்பினர் பசுமை மா.தில்லை சிவக்குமார், சிலம்ப ஆசான்கள் சங்கத் தலைவர் பி.ராஜேந்திர குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்தப் போட்டியானது காலை 8 மணிக்கு தொடங்கி 9 மணி வரை நடைபெற்றது. விளையாட்டுத் துறையில் சிலம்பத்திற்கு உள் இட ஒதுக்கீடு வழங்கவும் இதில் கோரிக்கை விடுத்தனர்.

இதற்கான ஏற்பாடுகளை, மாவட்ட சிலம்ப பயிற்சியாளர்கள் நலச்சங்கத்தைச் சேர்ந்த கார்த்திக், கீர்த்தனா, சுரேந்தர் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.

படிக்க வேண்டும்

spot_img