fbpx
Homeபிற செய்திகள்தி சம்ஹிதா அகாடமியில் விளையாட்டு விழா

தி சம்ஹிதா அகாடமியில் விளையாட்டு விழா

கோவை மலுமிச்சம் பட்டி பகுதியில் உள்ள, சம்ஹிதா அகாடமியில் நடைபெற்ற விளையாட்டு விழாவில் மாணவ, மாணவிகள் ஆர்வமுடன் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.

கோவை மலுமிச்சம் பட்டி பகுதியில் உள்ள, சம்ஹிதா அகாடமியின் ஆறாம் ஆண்டு விளையாட்டு விழா, பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. முன்னதாக நடைபெற்ற இதன் துவக்க விழாவில், பள்ளியின் முதல்வர் புஷ்பஜா கண்ணதாசன், தேசிய கொடியை ஏற்றி விளையாட்டு போட்டி களை துவக்கி வைத்தார். இதில் வாயு, அக்னி, பிருத்வி மற்றும் ஜல் என நான்கு அணிகளாக பள்ளி மாணவ, மாணவியர்கள் விளையாட்டு போட்டிகளில் பங்கேற்றனர்.

முன்னதாக பள்ளி மாணவ, மாணவிகளின் அணிவகுப்பு நடைபெற்றது. தொடர்ந்து, தடகள போட்டிகள், சிலம்பம், கராத்தே, பிரமிடு, மாஸ்டர் டிரில் மற்றும் 200 மற்றும் 400 மீட்டர் ஓட்டப்பந்தயம் உள்ளிட்ட போட்டிகள் நடைபெற்றன. இதில் ஆர்வமுடன் கலந்து கொண்ட மாணவ, மாணவிகள் அசத்தலாக தங்கள் திறமைகளை நிரூபித்தனர். அனைத்து போட்டிகளிலும் சிறந்து விளையாடிய வாயு அணி அதிக புள்ளிகள் பெற்று ஒட்டு மொத்த சாம்பியன் கோப்பையை தட்டி சென்றனர்.

முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய பள்ளி முதல்வர் புஷ்பஜா,. மாணவர்களுக்கு விளை யாட்டு என்பது மிகவும் முக்கியமான ஒன்று எனவும், எங்களது பள்ளியில் கல்வியோடு மாணவ, மாணவிகளின் விளையாட்டு திறன்களை ஊக்குவிக்கும் வகையில் செயல்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார். விழாவில் மாணவ மாணவிகள், பெற்றோர்கள், பள்ளி ஆசிரிய, ஆசிரியைகள் என பலர் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img