fbpx
Homeபிற செய்திகள்தமிழ்நாடு- கேரளா மாநில காவல் அதிகாரிகள் கலந்தாய்வு கூட்டம்: போலி மது, கஞ்சா ஒழிக்க ஆலோசனை

தமிழ்நாடு- கேரளா மாநில காவல் அதிகாரிகள் கலந்தாய்வு கூட்டம்: போலி மது, கஞ்சா ஒழிக்க ஆலோசனை

கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் மற்றும் கேரளா காவல் கண் காணிப்பாளர் ஆனந்த் தலை மையில் கோவை மாவட்ட காவல் அலுவலகத்தில் மாநிலங்களுக்கு இடையேயான எல்லை ஒருங் கிணைப்பு கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.

இக்கலந்தாய்வு கூட்டத்தில் கோவை மாவட்ட கூடுதல் கண்காணிப்பாளர் சுரேஷ், கேரளா பாலக்காடு உதவி காவல் கண்காணிப்பாளர் அஸ்வதி ஜுஜி, பாலக்காடு கலால் துறை ஆணையர் ராகேஷ், பெரிய நாயக்கன் பாளையம் துணை காவல் கண்காணிப்பாளர் நமச்சிவாயம், பேரூர் துணை காவல் கண்காணிப்பாளர் சிவ குமார், வால்பாறை துணை காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநிதி, மாவட்ட குற்றப் பிரிவு துணைக் காவல் கண்காணிப்பாளர் இளமுருகன் , அகலி துணை காவல் கண்காணிப்பாளர் அசோகன், உட்பட காவல் ஆய்வாளர்கள் காவல் உதவி ஆய்வாளர்கள் மற்றும் கேரளா மற்றும் தமிழ்நாடு எல்லைப்புறப் பகுதிகளில் உள்ள காவல் நிலையங்களின் காவல் நிலைய பொறுப்பு அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில் மாநிலங்களுக் கிடையேயான குற்றவாளிகளின் செயல்பாடுகள் பற்றிய முன் கூட்டியே உளவுத்துறைகள் தக வல்கள் சேகரித்தல் மற்றும் பரிமாறிக்கொள்ளுதல், லாட்டரி, பாலியல் தொழில், போலி மது, கஞ்சா, கனிமங்கள், மணல், மதிப்புமிக்க பொருட்கள் கடத்தல், போன்ற சட்டவிரோத செயல்களின் நடவடிக்கைகள் பற்றிய தகவல்களை சேகரித்தல் பற்றியும் ,எல்லை சோதனைச் சாவடிகள் மூலம் எல்லை தாண்டிய குற்ற செயல்களை கட்டுப்படுத்துதல் பற்றியும், இரு மாநிலங்களுக்கு இடையேயான குற்றங்களை கட்டுப்படுத்த இரு மாநிலங்களின் தனிப்படைகளை ஒருங்கி ணைப்பது பற்றியும், எல்லைப் பகுதியில் நடைபெறும் குற்றங்களில் தடுக்க எடுக்கப்படும் நடவடிக்கைகள் பற்றியும், முக்கிய பிரமுகர்களின் வழிப்பாதுகாப்பு பற்றியும், இரு மாநிலங்களுக்கு இடையேயான சட்டவிரோத போ க்குவரத்து, மருத்துவக் கழிவுகள் மற்றும் கால்நடைக் கழிவுகளை கொட்டுவதைத் தடுத்தல் பற்றியும், சட்டம் மற்றும் ஒழுங்கைப் பராமரிப்பதில் மாநிலங்களுக்கு இடையேயான ஒருங்கிணைப்பு பற்றியும் இக்கலந்தாய்வு கூட்டத் தில் ஆலோசிக்கப்பட்டது.

மேலும் இக்கலந்தாய்வு கூட் டத்தில் கலந்து கொண்ட இரு மாநில காவல் அதிகாரிகளும் மாநிலங்களின் எல்லை தாண்டி செயல்பட உள்ள இடையூ றுகளை இரு மாநில காவல் கண்காணிப்பாளர்களிடம் எடுத்துரைத்தனர்.

இந்நிலையில் இரு மாநில காவல் கண்காணிப்பாளர்களும் பணியில் உள்ள இடையூறுகளை தவிர்க்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து காவல் அதிகாரிகளுக்கு அறிவுரைகள் வழங்கினர்.

படிக்க வேண்டும்

spot_img