fbpx
Homeபிற செய்திகள்அகில இந்திய குத்துச்சண்டை போட்டியில் தமிழக மாணவர்கள் சாதனை

அகில இந்திய குத்துச்சண்டை போட்டியில் தமிழக மாணவர்கள் சாதனை

அகில இந்திய குத்துச் சண்டை போட்டி ஜூனியர் மாணவர்களுக்கு கடந்த 21ம் தேதி முதல் நேற்று முன்தினம் வரை மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் உள்ள சத்திரபதி சிவாஜி இண்டோர் ஸ்டேடியத்தில் நடை பெற்றது.
இப்போட்டி லைட் காண்டாக்ட் பாயிண்ட் பைட், லோகிக்லைட், காண்டக்ட் என பல்வேறு பிரிவுகளில் நடைபெற்றது. இதில் கடலூர் மாவட்ட அமைச்சூர் குத்துச்சண்டை மாணவர்கள் சென்சாய் ரெங்கநாதன் தலைமையில் தமிழ்நாடு அமைச்சூர் குத்துச்சண்டை அணியுடன் இணைந்து போட்டியிட்டு அகில இந்திய அளவில் மாணவர்கள் வெற்றி பெற்றனர்.

இதில் லைட் காண்டக்ட் மற்றும் பாயின்ட் பைட் பிரிவில் கடலூர் மாவட்ட மாணவர்கள் கிரித்திஷ் முதல் பரிசும், லைட் கான்டக்ட் பிரிவில் முகுந் தன் 2ம் பரிசும், லோகிக் பிரிவில் மாணவி ஆதிர சகானா 3ம் பரிசும் பெற்று தமிழகத்திற்கும், கடலூர் மாவட்டத்திற்கும் பெருமை சேர்த்துள்ளனர்.

படிக்க வேண்டும்

spot_img