TNSCST நிதியுதவியுடன், ‘தொழில்துறை தேவைகளுக்கான அறிவியல் மற்றும் தொழில்நுட்ப திறனை உருவாக்குதல்’ கருத்தரங்கின் தொடக்க விழா ஈரோடு, திண்டல், வேளாளர் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் நடந்தது. கல்லூரி செயலாளர் எஸ்.டி.சந்திரசேகர், வேளாளர் கல்வி அறக்கட்டளையின் உறுப்பினர் எம்.யுவராஜா, கல்லூரி முதல்வர் டாக்டர்.எம்.ஜெயராமன் ஆகியோர் உரையாற்றினர்.
விழாவை, ஈரோடு மாயா பஜார் உணவகத்தின் நிர்வாக பங்குதாரர் டாக்டர் பி.நந்தகுமார் துவக்கி வைத்தார்.