fbpx
Homeபிற செய்திகள்மேட்டுப்பாளையம் தென்திருப்பதி திருமலை ஸ்ரீவாரி ஆலய பிரம்மோற்சவ விழா துவக்கம்

மேட்டுப்பாளையம் தென்திருப்பதி திருமலை ஸ்ரீவாரி ஆலய பிரம்மோற்சவ விழா துவக்கம்

மேட்டுப்பாளையத்தை அடுத்த ஜடையம்பாளையம் ஆலாங்கொம்பு பகுதியில் தென்திருப்பதி திருமலை ஸ்ரீவாரி ஆனந்த நிலையம் உள்ளது. இங்கு ஆண்டு தோறும் பிரம்மோற்சவ நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம்.

அந்த வகையில் இந்த ஆண்டின் வருடாந்திர பிரம்மோற்சவம் நிகழ்ச்சி நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது. முன்னதாக ஸ்ரீதேவி பூதேவி தாயாருடன் சப்பரத்தில் எழுந்தருளிய ஸ்ரீ மலையப்ப சுவாமி, கருட கொடியுடன் கோவிலின் நான்கு மாட வீதிகளின் வழியாக வலம் வந்து பின் கோவிலை சென்றடைந்தார்.

தொடர்ந்து கோவில் தங்க கொடிமரத்திற்கு சந்தனம்,மஞ்சள்,பால் உள்ளிட்டவற்றால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து கருடாழ்வார் உருவம் பொறிக்கப்பட்ட கொடி தங்கக்கொடி மரத்தில் வேத விற்பன்னர்கள் வேத மந்திரங்கள் ஓத,மேளதாளங்கள் முழங்க கொடி ஏற்றப்பட்டது.

தொடர்ந்து மலையப்ப சுவாமி ஸ்ரீதேவி பூதேவி தாயாருடன் பெரிய சேஷ வாகனத்தில் எழுந்தருளி திருவீதி உலா வர உள்ளார்.

இந்நிகழ்ச்சியில் அன்னூர் கே.கோவிந்தசாமி நாயுடு குடும்பத்தினர் மற்றும் கே.ஜி. தொழில் நிறுவனத்தின் அலுவலர்கள், பணியாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img