fbpx
Homeபிற செய்திகள்கீழே கிடந்த ரூ.50,000-ஐ காவல் நிலையத்தில் ஒப்படைத்த பெண்ணுக்கு ஆணையர் பாராட்டு

கீழே கிடந்த ரூ.50,000-ஐ காவல் நிலையத்தில் ஒப்படைத்த பெண்ணுக்கு ஆணையர் பாராட்டு

கோவை, மாநகரில் சாலையில் கிடந்த ரூ.50,000 – ஐ காவல் நிலையத்தில் ஒப்படைத்த பெண்ணுக்கு காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் சான்றிதழ் அளித்து பாராட்டு தெரிவித்துள்ளார்.

கோவை மாநகரில் உள்ள ஒரு சாலையில் ஒருவர் ரூ.50,000 பணத்தை அண்மையில் தவறவிட்டு உள்ளார். இந்த பணம் கொண்ட சிறிய பார்சல் கேட்பாரின்றி கிடந்து உள்ளது. இந்நிலையில் அந்த வழியே வந்த நிர்மலா எனும் பெண் அதனைப் பார்த்து உள்ளார். அதில் ரூ.50,000 இருப்பதைக் கண்டதும், அருகில் உள்ள சி-2 பந்தய சாலை காவல் நிலையத்தில் உடனடியாக ஒப்படைத்து உள்ளார். நேர்மையாக செயல்பட்ட நிர்மலாவை கோவை காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் நேரில் அழைத்து பாராட்டினார். மேலும், அவரது நேர்மையான செயலுக்காக சான்றிதழையும் வழங்கினார்.

இத்தகைய நேர்மையான செயல்கள் சமூகத்தில் நல்ல முன்னுதாரணமாக அமையும் என்றும், மற்றவர்களும் இதுபோன்ற நேர்மையான செயல்களை மேற்கொள்ள வேண்டும் என்றும் காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் தெரிவித்தார். பொதுமக்களின் ஒத்துழைப்பு காவல் துறையின் செயல்பாடுகளை மேம்படுத்தும் என்றும் அவர் கூறினார்.

படிக்க வேண்டும்

spot_img