இந்திய தொழில் வர்த்தக சபை கோவை கிளை மற்றும் கோயமுத்தூர் அட்வர்டைசிங் கிளப் இணைந்து தொழில்துறை களில் சிறந்து விளங்கும் முன்னணி தொழிலதிபர்கள் மற்றும் சாதனையாளர்களுக்கு பிராண்ட் கோயம்புத்தூர் தூதுவர் விருதுகள் வழங்கும் விழா, கோவை அவினாசி சாலையில் உள்ள ரெசிடென்சி டவர் ஓட்டல் அரங்கில் நடைபெற்றது.
ஆறாவது எடிஷனாக நடைபெற்ற இதில், இந்திய தொழில் வர்த்தக சபை கோவை கிளை தலைவர் ராஜேஷ் பி.லுந்த், கோயமுத்தூர் அட்வர்டைசிங் கிளப் தலை வர் ஆர்எல்என்.சிவகுமார் ஆகியோர் தலைமை தாங் கினர்.
விழாவில் கொங்கு மண்ட லத்தில் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் செல்வாக்கு மிக்க வல்லுநர்கள் மற்றும் தொழிலதிபர்களுக்கு விருதுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டது.
இதில் லெகசி பிராண்ட் விருது பிரீமியர் மில்ஸ் குழுமத்திற்கும், ஐகானிக் பிராண்ட் விருது கிராப்ட்ஸ் மேன் ஆட்டோமே ஷன் நிறுவனம், மற்றும் ராம்ராஜ் காட்டன் நிறுவனத்திற்கு வழங் கப்பட்டது.
இதே போல கே.எம்.சி.எச். மருத்துவமனைக்கு பிராண்ட் அம்பாசிடர் விருதும், பிராமினன்ஸ் விண்டோ சிஸ்டம்ஸ் நிறுவனத்திற்கு எமர்ஜிங் பிராண்ட் விருதும் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட டி.வி.எஸ். சப்ளை செயின் சொல்யூசன்ஸ் குழுமத்தின் தலைவர் ஆர்.தினேஷ் விருது களை அந்தந்த நிறுவனத்தின் தலைவர்களுக்கு வழங்கி கவுரவித்தார்.
அப்போது பேசிய அவர், இது போன்ற கோவையின் பெருமைகளை கூறும் விதமாக வழங்கப்படும் விருதுகள் கோவையின் தொழில் முன் னேற்றத்திற்கு பயனளிப் பதோடு, சர்வதேச அளவில் கோவையின் தொழில் வளர்ச் சியை கொண்டு செல்ல ஊக்கமளிப்பதாக இருக்கும்
என தெரிவித்தார்.
விழாவில், வனிதா மோகன், கிருஷ்ணா ஸ்வீட்ஸ் எம்.கிருஷ்ணன், செல்வம் ஏஜன்சீஸ் நந்தகுமார், கிருஷ் ணராஜ் வாணவராயர், கே.ஜி. பாலகிருஷ்ணன், பி.எஸ்.ஜி. நிர்வாக அறங் காவலர் எல்.கோ பால கிருஷ்ணன் மற்றும் இந்திய தொழில் வர்த்தக சபை கோவை கிளை – கோயமுத்தூர் அட்வர்டைசிங் கிளப் நிர்வா கிகள், உறுப்பினர்கள் என பலர் கலந்து கொண்டனர்.