fbpx
Homeபிற செய்திகள்தூத்துக்குடி பள்ளிக்கு மேஜை- இருக்கைகள் வழங்கப்பட்டது

தூத்துக்குடி பள்ளிக்கு மேஜை- இருக்கைகள் வழங்கப்பட்டது

தூ.நா.தி.அ.க. தொடக்கப்பள்ளியில் நலத்திட்டங்கள் வழங்கும் விழா தூத்துக்குடி, பண்டாரம்பட்டி தூ.நா.தி.அ.க. தொடக்கப்பள்ளியில் தூத்துக்குடி டைட்டன்ஸ் ரோட்டரி சங்கம் சார்பாக மாணவர்கள் பள்ளியில் பயன்படுத்த தேவையான 9 செட் மேஜை மற்றும் இருக்கைகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

விழாவிற்கு தூத்துக்குடி டைட்டன்ஸ் ரோட்டரி சங்கத்தின் துணைத் தலைவர் பொன்சேகர் தலைமை தாங்கினார். பொது மேலாளர் பாலாஜி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். டைட்டன்ஸ் ரோட்டரி சங்கத்தின் தலைவர் பழனிச்சாமி, மேலாளர் சொர்ணமணிகுமார் அவர்களும் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள். இவ்விழாவில் தூத்துக்குடி மாநகராட்சி முதலாவது வார்டு உறுப்பினர் லயன் சிவக்குமார், டைட்டன் ரோட்டரி சங்கத்தின் உறுப்பினர்கள் ரவிச்சந்தர் மற்றும் ரமேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

விழாவில் கலந்து கொண்ட அனைவரையும் பள்ளியின் தலைமை ஆசிரியர் நெல்சன் பொன்ராஜ் வரவேற்று பேசினார். டைட்டன்ஸ் ரோட்டரி சங்கத்தின் முதன்மை பொறுப்பாளர்கள் உரையாற்றினார்கள். அதனை தொடர்ந்து மாணவர்கள் அமர்ந்து படிக்கும் வண்ணமாக 9 செட் மேஜை மற்றும் இருக்கைகள் வழங்கப்பட்டது. விழாவில் பள்ளியின் மாணவர்கள், முன்னாள் மாணவர்கள், பெற்றோர்கள் அனைவரும் கலந்து கொண்டார்கள். பள்ளியின் உதவி ஆசிரியர் பெல்சிபாய் நன்றி கூறினார்.

படிக்க வேண்டும்

spot_img