fbpx
Homeபிற செய்திகள்தமிழ்நாட்டில் சிறந்த 100 கல்லூரிகளுக்கு பாராட்டு விழா

தமிழ்நாட்டில் சிறந்த 100 கல்லூரிகளுக்கு பாராட்டு விழா

தமிழ்நாடு சுயநிதி கலை அறிவியல் மற்றும் மேலாண்மை சங்கத்தின் சார்பாக தேசிய நிறுவன தரவரிசை கட்டமைப்பின் ஒரு நாள் மாநில அளவிலான கருத்தரங்கம் மற்றும் தமிழ்நாட்டில் சிறந்த 100 கல்லூரிகளுக்கான பாராட்டு விழாவும் கடந்த 15ம் தேதி ரேஸ்கோர்ஸ் சாலையில் உள்ள காஸ்மோ பாலிட்டன் கிளப் ஜி.வி ஹாலில் நடைபெற்றது.

இந்த கருத்தரங்கில் பாடத் திட்டத்தில் சிறப்பான நடைமுறைகளை ஆராய்வதும் நுண்ணறிவுகளைப் பகிர்ந்துகொள்வது ஆகும். இதன் துவக்க விழாவில் தமிழ் நாடு சுயநிதி கலை அறிவியல் மற்றும் மேலாண்மை சங்கத்தின் தலைவர் பேராசிரியர் அஜீத் குமார் லால் மோகன் பேசினார்.

தொடர்ந்து கற்பகம் உயர் கல்வி அகாடமி வேந்தர் டாக்டர் ராமசாமி, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் துணை வேந்தர் டாக்டர் கீதா லட்சுமி ஆகியோர் கௌரவ விருந் தினர்களாக கலந்து கொண்டு உரையாற்றினர்.

முன்னதாக தமிழ்நாடு சுயநிதி கல்லூரிகளின் சங்கத்தின் செயலாளர் சேதுபதி வரவேற்புரையாற்றினார். தேசிய நிறுவன தரவரிசை கட்டமைப்பின் தரவரிசையில் தமிழ்நாட்டில் சிறந்த 100 கல்லூரிகளுக்கான பாராட்டு விழாவில் சான்றிதழும் பதக்கங்களும் வழங்கி கல்லூரிகள் கௌரவிக்கப்பட்டன.

படிக்க வேண்டும்

spot_img