fbpx
Homeபிற செய்திகள்பொதுமக்கள் அளிக்கும் மனுக்கள் மீது நிச்சயமாக நடவடிக்கை எடுப்போம்: கிராமசபை கூட்டத்தில் கனிமொழி எம்.பி. பேச்சு

பொதுமக்கள் அளிக்கும் மனுக்கள் மீது நிச்சயமாக நடவடிக்கை எடுப்போம்: கிராமசபை கூட்டத்தில் கனிமொழி எம்.பி. பேச்சு

காந்தியடிகள் 156ஆவது பிறந்தநாள் விழாவினை முன்னிட்டு ஓட்டாபிடாரம் ஊராட்சி ஒன்றியம் எப்போதும்வென்றான் ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி, சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பி.கீதா ஜீவன், மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத், ஆகியோர் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டனர். தொடர்ந்து, காந்தியின் திருவுருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

இக்கிராம சபைக் கூட்டத்தில் தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணா நிதி, சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பி.கீதா ஜீவன், மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத், ஆகியோர் முன்னிலையில், கிராம ஊராட்சி நிர்வாகம், பொது நிதி செலவினம் மற்றும் திட்டப்பணிகள், கிராம ஊராட்சியின் தணிக்கை அறிக்கை, தூய்மையான குடிநீர் விநியோகத்தினை உறுதி செய்தல், மாற்றுத்திறனாளிகளுக்கான கணக்கெடுப்பு உரிமைத்திட்டம், தீன்தயாள் உபாத்யாய கிராமப் புற திறன் பயிற்சித் திட்டம், ஊரகப் பகுதிகளில் மழைநீர் சேகரிப்பு அமைப்புகள் ஏற்படுத்த எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள், வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், கொசுக்கள் மூலம் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைஉறுதித் திட் டம், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டம், தூய்மை பாரத இயக்கம் (ஊரகம்), ஜல் ஜீவன் இயக்கம், சமூக தணிக்கை செயல் திட்டம், மக்கள் திட்டமிடல் இயக்கம், காசநோய் இல்லா கிராம ஊராட்சியாக அறிவிப்பு செய்தல் உள்ளிட்ட பல்வேறு திட்டப்பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டது.

இக்கூட்டத்தில், தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி தெரிவித்த தாவது: மக்கள் நலத்திட்டங்கள் அனைத்தும் கடைக்கோடி கிராமங்களில் வசிக்கக்கூடிய ஏழை எளிய மக்களை சென்றடை வதை உறுதி செய்யும் வகையில் அனைத்துத்துறை அரசு அலுவலர்கள், மக்கள் பிரதிநிதிகள் என அனைவரும் மக்களைத்தேடி அவர்களின் கிராமத்திற்கே நேரில் சென்று கோரிக்கைகளைக் கேட்ட றிந்து அவர்களின் கோரிக்கை மனுக்களை உடனடியாக பரிசீ லனை செய்து அங்கேயே தீர்வு காணக் கூடிய அரசாக தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையிலான தமிழ்நாடு அரசு செயல்படுகிறது.

தமிழ்நாடு முழுவதும் அனும திக்கப்பட்ட கண்மாய்களிலிருந்து விவசாய நிலங்களுக்கு விலையில் லாமல் வண்டல் மண் எடுப்பதற்கு அரசாணை வெளியிட்ட அரசு தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையிலான தமிழ்நாடு அரசு. அதன்படி, அனைத்து பகுதிகளி லும் விவசாயிகள் தங்களது நிலங்களுக்கு மண் எடுத்து பயன்பெற்று வருகிறார்கள்.

விவசாய நிலத்திற்கு வண்டல் மண் எடுப்பது தொடர்பாக ஏதேனும் கோரிக்கை இருந்தால் மக்கள் பிரதிநிதிகளிடமோ, அரசு அலுவலர்களிடமோ தெரிவித் தால் நிச்சயமாக அதற்கு தீர்வு காணப்படும்.

கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் விடுபட்ட தகுதியான அனைத்து மகளிருக்கும் மாதம் 1000 ரூபாய் வழங்குவதற்கு தேவையான நடவடிக்கைகளை தமிழ்நாடு முதலமைச்சர் எடுத்து வருகிறார்கள் ஆகையால், தகுதி யான அனைத்து மகளிருக்கும் விரைவில் வழங்கப்படும்.

உங்களது கோரிக்கைகளைக் கேட்டறிந்து அதனை நிவர்த்தி செய்வதற்காகத்தான் மக்கள் பிரதிநிதிகளாகிய நாங்கள், மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அனைத்துத்துறை அரசு அலுவலர் கள் இங்கு வந்துள்ளோம். எனவே, பொதுமக்களாகிய நீங்கள் கொடுக்கும் மனுக்கள் மீது நிச்சயமாக நடவடிக்கை எடுப்போம் என தெரிவித்தார்.

அதனைத்தொடர்ந்து, தமிழ் நாடு ஊரக வாழ்வாதார இயக் கத்தின் சார்பில் 3 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.16,50,000 கடனுதவிகளையும், தோட்டக்கலைத்துறை சார்பில் 2 பயனாளிகளுக்கு தென்னங்கன்று களையும் தூத்துக்குடி பாராளு மன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி வழங்கினார்கள்.

முன்னதாக, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கெதிரான சமூக தீமை நிராகரிப்பு உறுதிமொழி, எச்.ஐ.வி மற்றும் எய்ட்ஸ் குறித்த உறுதிமொழியினை தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி தலைமையில் அனைவரும் ஏற்றுக் கொண்டனர்.

மேலும், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை, தோட் டக்கலைத்துறை, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டம், பொதுசுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறை, கால்நடை பராமரிப்புத்துறை ஆகிய துறைகள் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் குறித்து பொதுமக்கள் அறிந்து பயன்பெறும் வகையில் கண்காட்சி அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தது.

மேலும், மக்களைத்தேடி மருத்துவம் திட்டத்தின் மூலமாக சிறப்பு மருத்துவ முகாம் அமைக்கப்பட்டு, பொதுமக்களுக்கு சர்க்கரை அளவு, இரத்த அழுத்தம் உள்ளிட்ட அடிப்படையான பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது.

இக்கூட்டத்தில் விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் ஜி.வி.மார்க் கண்டேயன், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் பெ.ஜெகன், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) இரா.ஐஸ்வர்யா, கோவில்பட்டி வருவாய் கோட்டாட்சியர் மகாலட்சுமி, ஓட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவர் எல்.ரமேஷ், ஓட்டப் பிடாரம் ஊராட்சி ஒன்றிய துணைத் தலைவர் காசி விஸ்வ நாதன், உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) உலகநாதன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், எப்போதும்வென்றான் ஊராட்சி மன்றத்தலைவர் முத்துக்குமார், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img