fbpx
Homeபிற செய்திகள்துணை முதல்வராக உதயநிதி- பொறுப்பேற்பு- மேட்டுப்பாளையத்தில் திமுக கொண்டாட்டம்

துணை முதல்வராக உதயநிதி- பொறுப்பேற்பு- மேட்டுப்பாளையத்தில் திமுக கொண்டாட்டம்

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் உதயநிதி ஸ்டாலின் தமிழகத்தின் துணை முதலமைச்சராக அறிவிக் கப்பட்டிருப்பதை திமுக வினர் கொண்டாடி மகிழ்ந்தனர். மேட்டுப்பா ளையம் பேருந்து நிலையம் அருகே நேற்று காலை நகர செயலாளர் முனு சாமி தலைமையில் கூடிய தலைமை செயற் குழு உறுப்பினர் டி.ஆர்.சண் முகசுந்தரம், மாநில விவசாய தொழிலாளர் அணி துணை செயலாளர்கள் அருண்குமார், சி.ஆர் ராமச்சந்திரன், கிழக்கு ஒன்றிய செயலாளர் கல் யாணசுந்தரம் உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அங்கிருந்த அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

பின்னர் திமுக தலைவரும் முதல்வரு மான மு.கஸ்டாலின் மற்றும் துணை முதல்வ ராக பதவியேற்க உள்ள உதயநிதி ஸ்டாலின் ஆகியோரை வாழ்த்தி முழக்கமிட்டனர். இத னையடுத்து பட்டாசு கள் வெடித்தும் அங்கு கூடியிருந்த மக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் திமுகவினர் உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதலமைச்சர் பதவி வழங் கப்பட்டதை கொண் டாடி மகிழ்ந்தனர்.

இந்த நிகழ்ச்சியில் நகர மன்ற துணைத்தலை வர் அருள் வடிவு முனுசாமி, கலை இலக் கிய பிரிவு துணை அமைப்பாளர் கலிங்கா கணேசன், வழக்க றிஞர் சந்தனா குமார், சிறுமுகை பேரூராட்சி செயலாளர் உதயகுமார், ஆலயம் பாலு, உட்பட முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img