கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், ரிலையன்ஸ் உயிர் சக்தி நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்படுத்தி உள்ளது. இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பதிவாளர் முனைவர் தமிழ்வேந்தன் முன்னிலையில் உயிர் சக்தி உற்பத்திக்கான தீவனப் பயிர்களை அடையாளம் காண்பதற்காக கையொப்பமானது.
முனைவர் தமிழ்வேந்தன். தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் சார்பாகவும், ரிலையன்ஸ் உயிர் சக்தி நிறுவனத்தின் சார்பாக பசீர் அகமது சிராசி, முதன்மை செயல் அலுவலர், ஆர்.பி.இ.எல். மும்பை புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டனர்.
பயிர் இனப்பெருக்கம் மற்றும் மரபியல் மைய இயக்குனர் முனைவர் ஆர்.ரவிகேசவன். தீவனப் பயிர் துறை பேராசிரியர் மற்றும் தலைவர் முனைவர். ஆர்.புஷ்பம், தீவனப் பயிர் துறையின் விஞ்ஞானிகள் ஜி.ஆனந்தன், பாலாஜி பெருமாள் ஆகியோர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.
உயிர் சக்தி ஆற்றல் உற்பத்திக்கு ஏற்ற தீவனப் பயிர்களை எவ்வாறு பயிர் செய்ய வேண்டும் என்ற தொழில் நுட்பத்தை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம். ஆர்.பி.இ.எல் நிறுவனத்திற்கு வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.