நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக பொறுப்பாளராக முன்னாள் சட் டமன்ற உறுப்பினரும் முன்னாள் மேற்கு மாவட்ட கழக செயலாளருமான கே.எஸ்.மூர்த்திக்கு நாமக்கல் மேற்கு மாவட்ட கழக பொறுப்பாளராக அறிவிக்கப்பட்டு பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார்.
இதனைத் தொடர்ந்து பரமத்தி வேலூருக்கு வருகை தந்த அவருக்கு பரமத்திவேலூர் சட்ட மன்றத் தொகுதி திமுக சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தொ டர்ந்து பரமத்திவேலூரில் உள்ள அண்ணா சிலை, காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி தொண்டர்கள் மத்தியில் பேசியதாவது:
தமிழக முதல்வரும் துணை முதல்வரும் என் மீது நம்பிக்கை வைத்து இப்பொறுப்பினை வழங்கியுள்ளனர். அவர்களின் நம்பிக்கையை காப்பாற்றும் வகையில் அனைவரும் ஒருமித்த கருத்தோடு ஒத்துழைப்பு வழங்கிட வேண்டும். வரும் சட் டமன்றத் தேர்தலில் தமிழகத்தில் 200க்கும் மேற்பட்ட தொகுதிகளில் நாம் வெற்றி பெற உள்ள நிலையில் நாமக்கல் மேற்கு மாவட்டத்தில் உள்ள மூன்று தொகுதிக ளிலும் திமுக வை வெற்றி அடையச் செய்ய வேண்டும், அதற் காக இன்றிலிருந்தே ஒவ்வொரு வரும் உற்சாகத்துடன் பணியாற்ற வேண்டும்.
2026 ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலில் மேற்கு மாவட்டத்தில் உள்ள 3 சட்டமன்றத் தொகுதிகளையும் வெற்றி பெறச் செய்து முதல்வருக்கு பரிசாக வழங்கவேண்டும்,
மீண்டும் இது திமுகவின் கோட்டை என நிரூபிக்க வேண்டும். இவ்வாறு கே.எஸ்.மூர்த்தி கேட்டுக் கொண்டார்.
இந்நிகழ்ச்சியில் பரமத்தி ஒன்றிய செயலாளர் தனராஜ், கபி லர்மலை ஒன்றிய செய லாளர் சண்முகம், மோக னூர் மேற்கு ஒன்றிய செயலாளர் சண்முகம், எலச்சிபாளையம் கிழக்கு ஒன்றிய செயலாளர்தங்க வேலு, மாவட்ட விளை யாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளர் மகிழ் பிரபாகரன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் பூக்கடை சுந்தர், மாவட்ட அயலக அணி கண் ணன், வழக்கறிஞர் பால கிருஷ்ணன், மாவட்ட நெசவாளர் அணி தலைவர் முரளி உட்பட மாவட்ட ஒன்றிய பேரூர் கிளைக் கழக நிர்வாகிகளும் சார்பு அணி நிர்வாகிகளும் என இரண்டாயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.