ஹிமாச்சல் பிரதேஷம் சிம்லாவில் நவம்பர் 2 முதல் 6-ம் தேதி வரை நடக்கவுள்ள 19 வயதுக்கு உட்பட்டோர் தேசிய மகளிர் வாலிபால் போட்டிக்காக, திருவனந்தபுரம் சாய் சென்டரில் சாய் அணிக்காக பயிற்சி தரப்பட்டது.
அதில் மயிலாடுதுறை சாய் விடுதியில் தங்கி படிக்கும் சாத்தூர் மாணவி சுவாதிகா, தேனி மாணவி சிவப்பிரியா ஆகிய இருவரும் தேர்வானார்கள் .
இவர்களை சாய் மையம், மயிலாடுதுறை பொறுப்பாளரும் பயிற்சியாளருமான தனலட்சுமி, பயிற்சியாளர் முகமது தவ்பிக் உள்ளிட்டோர் வாழ்த்தினர்.
பயிற்சி முடிந்து இருவரும் சிம்லா செல்கின்றனர்.